மாதுரு ஓயா ராணுவ முகாமில் கைக்குண்டு வெடிப்பு! மூன்று சிப்பாய்கள் காயம் மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் கைக்குண்டு ஒன்று வெடித்ததில் ராணுவச் சிப்பாய்கள் மூவர் காயமுற்றுள்ளனர்.குறித்த விபத்து இன்று (29) இடம்பெற்றுள்ளது.இலங்கை மற்றும் ரஸ்ய இராணுவத்திற்கும் ரஷ்ய இராணுவத்தினர் கடந்த சில நாட்களாக மாதுரு ஓயா ராணுவ முகாமில் கூட்டு இராணுவப் பயிற்சியொன்றை மேற்கொண்டுள்ளனர்.குறித்த இராணுவ பயிற்சியின் போது கைக்குண்டு ஒன்று தவறுதலாக வெடித்த விபத்தில் காயமடைந்த மூன்று இராணுவ சிப்பாய்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்கைக்குண்டு வெடிப்பின் காரணமாக இராணுவ சிப்பாய்களின் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன
