இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை நேற்று உடன் ஒப்பிடும்போது இன்று (19) ரூபாய் 2, 000 அதிகரித்துள்ளது என சந்தை தரவுகள் காட்டுகின்றன. அதன்படி இன்று காலை கொழும்பு தங்க சந்தையில் 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை ரூபாய் 302,700 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 329,000 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,838 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
