100 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் யோகம்-இந்த நாலு ராசிகளின் வாழ்வே இனி ஔி மயம் தான்..!

 


கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் ஜனவரி 2026 இல், சக்திவாய்ந்த பஞ்சகிரஹி யோகம் உருவாக உள்ளது. மகர ராசியில் உண்டாகும் இந்த சிறப்பு யோகத்தின் பலனாக மேஷம் உள்ளிட்ட 4 ராசியினருக்கு ராஜ வாழ்க்கை காத்திரக்கிறது. வரும் 2026 ஆம் ஆண்டில் இவர்கள், தங்கள் வாழ்க்கையில் எண்ணற்ற நற்பலன்களை காண இருக்கின்றனர். குறிப்பாக, நிதி ஆதாயம் கிடைக்கும் - குடும்ப வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சுக்கிரன், சூரியன், புதன், சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகிய 5 கிரகங்கள் மகர ராசியில் இணைகிறது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழும் இந்த அரிய நிகழ்வு, வலிமையான பஞ்சகிரஹி யோகத்தை உண்டாக்குகிறது. நிபுணர்கள் கூற்றுப்படி மிகவும் வலிமையான யோகமாக கருதப்படும் இந்த பஞ்சகிரஹி யோகம், யாருக்கு என்ன பலன் அளிக்கிறது? என்பது குறித்து சற்று விரிவாக இங்கு காண்போம். மேஷம், மேஷ ராசி கொண்டவர்களின் தொழில் வாழ்க்கையில் ஏற்றம் காணும் ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வியாபாரம் செய்து வரும் நபர்கள், தங்கள் வியாபாரத்தை பல்வேறு கிளைகளுக்கு விரிவுப்படுத்துவார்கள். மேஷ ராசி கொண்டவர்களின் ஜாதகத்தில் 10 ஆவது வீட்டில் தாக்கத்தை உண்டாக்கும் இந்த கிரக நிலை மாற்றமானது, தொழில் வாழ்க்கையில் வளர்ச்சி காணும் வாய்ப்புகளை கொண்டு வருகிறது. வெளிநாட்டில் பணியாற்றி வரும் மேஷ ராசி ஆண்களுக்கு, விரைவில் சொந்த நாடு திரும்பும் வாய்ப்பு கிடைக்கும். சொந்த நாட்டில் தங்கள் விருப்பமான தொழிலை தொடங்கும் வாய்ப்பும் கிடைக்கும். காதல் திருமணம் செய்ய விரும்பும் நபர்களுக்கு சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் மனம் விரும்பும் நபர், உங்களிடம் உதவி கேட்டு வரலாம். நட்புறவாக தொடங்கும் இந்த உறவு, விரைவில் காதலாக மாறும் - கூடிய விரைவில் திருமணம் எனும் உறவில் தொடரும். தொழில் போட்டிகள் குறையும் இந்த காலத்தில் உங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்த முயற்சி செய்வீர்கள். உங்கள் விருப்பமான பொருட்களையும் வாங்கி குவிப்பீர்கள். ரிஷபம், ரிஷப ராசி கொண்டவர்களின் ஜாதகத்தில் லாப வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் இந்த பஞ்சகிரஹி யோகம், தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக, உங்கள் வருமானத்தை அதிகரிக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானத்தை கொண்டு வரும் மூலத்தையும் உண்டாக்குகிறது. ஜவுளி சார்ந்த தொழில் செய்து வரும் நபர்கள், தங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு விரிவுப் படுத்தும் வாய்ப்பினை பெறுவார்கள். அரசு பணிகளை எடுத்துச் செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெரிய ஆர்டர்களும் கிடைக்கும். சர்வதேச முதலீடுகளை உங்கள் தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் பயன்படுத்துவீர்கள். வெளிநாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து, உள்நாட்டில் வியாபாரம் செய்யும் நபர்களுக்கு எதிர்பார்த்த நற்செய்தி ஒன்று கிடைக்கும். செவ்வாய் கிரகத்தின் நேரடி பார்வை, திடீர் வருமானங்களை கொண்டு வரும். அதாவது, முன்னர் செய்த முதலீடுகளின் வழியே எதிர்பாராத வருமானத்தையும் கொண்டு வரும். நம்பிக்கையுடன் இருங்கள், போதுமான அளவு பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள். மகரம், மகர ராசியில் உண்டாகும் இந்த பஞ்சகிரஹி யோகம் மற்ற ராசிகளை காட்டிலும் கூடுதல் நன்மைகள் அளிக்கிறது. குறித்த இந்த காலத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும், பணியிடத்தில் சவால்கள் நிறைந்த பணிகளை தேர்வு செய்து, செய்து முடிப்பீர்கள்; அதில் வெற்றியும் காண்பீர்கள். துணிச்சலான முடிவு ஒன்றை இன்று நீங்கள் எடுக்க, தொழில் துறையில் உச்ச நிலை அடையும் வாய்ப்பு கிடைக்கும். திருமணம் முடித்தவர்கள், தங்கள் வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பு பெறுவார்கள். சூரியன் மற்றும் சுக்கிரனின் ஆசிர்வாதத்தால், உங்கள் தொழில் வாழ்க்கையில் நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த காரியங்களை முடிவுக்கு கொண்டு வரலாம். உங்கள் விருப்பம் போல் புதிய பணிகளை எடுத்து செய்யலாம். திருமணம் முடிக்காதவர்களுக்கு திருமண காரியங்கள் கைகூடும். குறிப்பாக, காதல் திருமணம் செய்ய விரும்பும் நபர்களுக்கு விரைவில் ஒரு நற்செய்தி கிடைக்கும். பெற்றோர் அனுமதியுடன் விரைவில் திருமணத்தை முடிக்கும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் ஏற்றம் காண்பீர்கள், அதிகாரம் மிக்க பதவியில் அமர்வீர்கள். மீனம் மீன ராசி கொண்டவர்களின் வாழ்க்கையில் மங்களகரமான விஷயங்கள் நடக்கும். பல நாட்களாக தள்ளி வந்த காரியங்களை தற்போது முடிப்பீர்கள். பொருளாதார நிலையில் எதிர்பார்த்த மாற்றத்தை கொண்டு வரலாம். உங்கள் கடன் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரலாம். திருமண தடை காரணமாக திருமணம் முடிக்காமல் காத்திருக்கும் நபர்களுக்கு விரைவில் திருமணத்தை முடிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். மண வாழ்க்கையில் காணப்பட்ட மனஸ்தாபங்கள், பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உங்கள் காதல் துணையுடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும். திருமணம் முடித்தவர்கள் தங்கள் வாழ்க்கை துணையின் அனுமதியுடன் - நண்பர்களுடன் இணைந்து வெளியூர் சுற்றுலா சென்று வரலாம். தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றத்தை காணலாம்.



கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.