யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு இந்து சமுத்திரத்தில் இறங்கி நீராட வேண்டாம் என பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் அறிவுறுத்தியுள்ளார். வடகீழ் பருவ மழை காலம் ஆரம்பிக்கப்பட்டு கடல் கொந்தளிப்பு காணப்படுவதாகவும் இதனால் உயிரிழப்புக்கள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சுற்றுலா பயணிகள் உட்பட வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு வருகை தருவோர் கடலில் இறங்கி நீராட வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
