கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மலயாட்டூரில், 19 வயது இளம்பெண் சித்ரபிரியாவின் கொடூர கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலனின் கொலைவெறி தாக்குதலில் உயிரிழந்த அந்த இளம்பெண்ணின் மரணம், காதல் வலையில் சிக்கிய இளைஞர்களுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. ஆண் நண்பரான அலன், சந்தேகத்தின் பேரில் கல்லால் தலையில் அடித்துக் கொன்ற கொடூரம், போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது! சித்ரபிரியா, மலயாட்டூர் முண்டங்கமட்டம் துருத்திப்பரம்பு பகுதியைச் சேர்ந்த ஷைஜுவின் மகள். பெங்களூருவில் ஏவியேஷன் படிப்பு பயின்று வரும் இவர், உள்ளூர் கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள வீடு திரும்பியிருந்தார். சனிக்கிழமை மாலை, "கடைக்குச் செல்கிறேன்" என்று வீட்டிலிருந்து புறப்பட்ட சித்ரபிரியா, அதன்பின் மாயமானார். குடும்பத்தினர் தீவிரமாகத் தேடியும் கிடைக்காத நிலையில், நேற்று மாலை அவரது உடல் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டது – தலையில் ஏற்பட்ட கடுமையான காயமே மரணத்துக்குக் காரணம்! இந்த கொலை வழக்கில், சித்ரபிரியாவின் ஆண் நண்பரான அலன் இன்று மாலை காலடி காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில், அலன் அதிர்ச்சிகரமான உண்மைகளை ஒப்புக்கொண்டான். "கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் காதலித்து வந்தோம். ஆனால், சமீப மாதங்களில் அவள் என்னைத் தவிர்க்கத் தொடங்கினாள். போன் செய்தால் எப்போதும் பிஸி! கேட்டால், அம்மா, அப்பா, அக்கா, குடும்பத்தினருடன் பேசுகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தாள்," என அலன் வாக்குமூலம் அளித்துள்ளான். சனிக்கிழமை சித்ரபிரியா தன்னைச் சந்திக்க வந்தபோது, அலன் அவளது செல்போனைச் சோதனையிட்டான். அதில், புதிய ஆண் நண்பருடன் செய்த சாட்டிங் மெசேஜ்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்ததைக் கண்டு கொதித்தெழுந்தான். இவனுடன் பேசிக்கொண்டிருந்துதான் என்னை அவாய்ட் செய்தாயா?" என்று கேட்டதும், இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் கல்லை எடுத்து சித்ரபிரியாவின் தலையில் அடித்துக் கொன்றுவிட்டதாக அலன் ஒப்புக்கொண்டான்.
இந்த கொடூரம், காதல் ஏமாற்றத்தின் விளைவாக நடந்துள்ளது! போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ரபிரியாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். "எங்கள் மகள் இப்படி ஒரு கொடூரத்துக்கு ஆளாவாள் என்று கனவிலும் நினைக்கவில்லை," என அவரது தந்தை ஷைஜு வேதனையுடன் தெரிவித்தார்கள். இந்த சம்பவம், மலயாட்டூர் பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. காதல் விவகாரங்களில் சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக உதவி தேடுங்கள் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற கொடூரங்கள் தொடராமல் இருக்க, இளைஞர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வழக்கு விசாரணை தொடர்கிறது – மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும்!
