மனைவியின் வினோத ஆசை-காட்டுக்குள் இரு ஆடவருடன் உடலுறவு-தடையாக இருந்த கணவன்-மனைவி எடுத்த கொடூர முடிவு..!
கள்ளக்காதலுடன் தொடர்புடைய உறவைத் தொடர்வதற்காக சொந்த கணவர், இரு குழந்தைகள் மற்றும் மாமனார்-மாமியார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை உணவில் விஷம் கலந்து கொலை செய்ய முயன்ற 33 வயது பெண் ஒருவர் கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கேரளாவின் பிரபல 'ஜாலி ஜோசப்' (ஜாலி ஜோசப்) கொலை வழக்கை நினைவூட்டுவதாக பரவலாகப் பேசப்படுகிறது. கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சைத்ரா.
பெலூர் தாலுகாவைச் சேர்ந்த கஜேந்திரா என்பவருக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானவர். இத்தம்பதிக்கு 10 வயதும் 8 வயதும் உடைய இரு மகன்கள் உள்ளனர். போலீசார் மற்றும் கஜேந்திராவின் புகாரின்படி, கடந்த மூன்று ஆண்டுகளாக தம்பதிக்கு இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்தன.
இந்தக் காலகட்டத்தில் சைத்ரா, தனது நண்பரான புனீத் என்பவருடன் தகாத உறவில் ஈடுபட்டார். இருவரும் அடிக்கடி வெளியிடங்களுக்குச் சென்று உல்லாசமாக இருந்தனர், குறிப்பாக ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிகளில்.
ஒருமுறை கஜேந்திரா, சைத்ராவின் செல்போனைப் பார்த்தபோது, காட்டுப்பகுதியில் புனீத்துடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களும் புகைப்படங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனால் ஆத்திரமடைந்த கஜேந்திரா சைத்ராவைத் தாக்கி, அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பினார்.
பின்னர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களின் மத்தியஸ்தத்தால் பிரச்சினை தீர்க்கப்பட்டு, சைத்ரா மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்தார்.
எனினும், அதன் பிறகு சைத்ரா புனீத்துடனான உறவை நிறுத்திவிட்டு, பெலூர் பகுதியைச் சேர்ந்த ஷிவு என்பவருடன் (தன்னைவிட 5 வயது இளையவர்) புதிய தகாத உறவில் ஈடுபட்டார்.
இருவரும் மீண்டும் காட்டுப்பகுதிகளுக்கு சென்று உல்லாசமாக இருந்தனர். கஜேந்திரா சந்தேகத்தால் சைத்ராவின் வாட்ஸ்அப் கணக்கை தனது கணினியில் இணைத்து கண்காணித்தார்.
அதில் சைத்ரா, ஷிவுவுடன் அநாகரீகமாக பேசிய செய்திகளும், "அறையில் நான்கு சுவர்களுக்குள் உல்லாசமாக இருப்பதைவிட, திறந்த வெளியில் இயற்கையோடு இணைந்து உல்லாசமாக இருப்பது தான் பிடிக்கும்" எனவும், தன்னை விட வயதில் இளைய ஆண்களுடன் உறவு கொள்வது தான் மகிழ்ச்சி என்றும் சேட் செய்திருந்தார் சைத்ரா.
மேலும், புனீத், நான், நீ மூன்று பேரும் சேர்ந்து ஒன்றாக இருக்கலாம். உனக்கு சம்மதம் என்றால் நான் புனீத் கிட்ட பேசுறேன் என்று எல்லை மீறி ஷிவுவுடன் பேசியுள்ளார் சைத்ரா என்பதும் கண்டுபிடிக்கப்பட்டன.
இதுகுறித்து கஜேந்திரா கேள்வி எழுப்பியதால் அச்சமடைந்த சைத்ரா, ஷிவுவின் உதவியுடன் கணவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை ஒழித்துக்கட்ட திட்டமிட்டார். கடந்த இரு மாதங்களாக உணவு மற்றும் காபியில் வலுவான தூக்க மாத்திரைகள் மற்றும் பிற நச்சுப் பொருட்களை கலந்து வந்தார்.
இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு தலைச்சுற்றல், அதிக தூக்கம், சோர்வு, நினைவுத்திறன் இழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. ஒருமுறை கஜேந்திரா சைத்ராவின் ஹேண்ட்பேக்கில் மாத்திரைகளைக் கண்டுபிடித்து மருத்துவரிடம் காட்டியபோது, அவை அதிக அளவு எடுத்தால் மூளைச்சாவுக்கு வழிவகுக்கும் வலுவான தூக்க மாத்திரைகள் எனத் தெரியவந்தது.
பின்னர் குடும்ப உறுப்பினர்களின் ரத்தப் பரிசோதனையில் விஷத்தடயங்கள் கண்டறியப்பட்டன. உடனடியாக கஜேந்திரா பெலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சைத்ராவை ஜூன் 5-ஆம் தேதி கைது செய்தனர். ஷிவு தலைமறைவாக உள்ளார்.
ஹாசன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகமது சுஜீதா கூறுகையில், "சைத்ரா உணவில் விஷம் கலந்தது உறுதியாகியுள்ளது. விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. ஷிவுவைப் பிடிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
கஜேந்திரா, குழந்தைகள் மற்றும் மாமனார்-மாமியார் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் கேரளாவின் கூடத்தாயி சயனைடு கொலை வழக்கில் ஜாலி ஜோசப் உணவில் விஷம் கலந்து குடும்ப உறுப்பினர்களை கொன்றது போலவே இருப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு விசாரணை தொடர்கிறது.
Summary : In Hassan, Karnataka, 33-year-old Chaitra was arrested for attempting to poison her husband Gajendra, two young sons, and in-laws to continue her extramarital affairs with Puneeth and Shivu. The plot, uncovered after suspicious pills and blood tests revealed toxins, mirrors the Jolly Joseph case in Kerala.
قد تُعجبك هذه المشاركات
إرسال تعليق
إرسال تعليق
Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.
Copied code!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.