மீண்டும் மண்சரிவு-வீடுகள் சேதம்-ஒருவருக்கு நேர்ந்த சோகம்..!

 

கண்டி, ஹுன்னஸ்கிரிய நகருக்கு அருகாமையில் இடம்பெற்ற மண்சரிவினால் ஒருவர் காயமடைந்துள்ளார். 

இதனால் 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

அந்தப் பிரதேசத்தில் நிலவிய மழையுடன் நேற்று (18)  இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நிலவும் அபாய நிலை காரணமாக, அருகிலிருந்த 2 பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருந்த 90 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.