அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அத்துடன், கடந்த 2025 நவம்பர் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட முன்னைய வர்த்தமானியில் உள்ள பல ஒழுங்குவிதிகள் மற்றும் ஏற்பாடுகளைத் திருத்தம் செய்து மற்றுமொரு வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.
