ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு சலுகைகளை வழங்குவதற்கென இணையத்தளம் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியத் திணைக்களம் இதற்கான வசதிகளைச் செய்துள்ளது. இந்த விடயம் ஓய்வூதியத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.திணைக்களத்துடன் தொடர்பிலுள்ள 20 ஓய்வூதியதாரர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.இதன்போது, பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கும் விளக்கமளிக்கப்பட்டன. விசேடமாக தற்போது கையடக்க தொலைபேசி ஊடாக, ஓய்வூதியதாரர்கள் அணுகக்கூடிய பல சேவைகள் ஓய்வூதியதியத் திணைக்களத்தினால் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
