கொல்கத்தாவின் பரபரப்பான தெருக்களில் ஒரு சாதாரண வீடு. அங்கு வசித்தவர் சுசிதா தாஸ் (கற்பனையான பெயர்), கணவரை இழந்து இரண்டு மகள்களுடன் தனியே வாழ்ந்து வந்தார். மூத்த மகள் ரியா (20 வயது), இளைய மகள் மியா (14 வயது, பள்ளி மாணவி).
சுசிதா அடிக்கடி ஒரு பிரபல வங்கிக்குச் செல்வார். அங்கு பணி செய்தவர் அர்ஜுன் ராய் (37 வயது), வங்கி மேலாளர். பணப் பரிவர்த்தனைக்காக அடிக்கடி சந்தித்ததால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. அது படிப்படியாக தகாத உறவாக மாறியது. கணவரை இழந்த சுசிதாவுக்கு அர்ஜுன் ஒரு புதிய ஆறுதலாகத் தோன்றினார்.
ஆனால், சமூகம் என்ன சொல்லும் என்ற பயத்தில் சுசிதா ஒரு கொடூரமான திட்டத்தை வகுத்தார். அர்ஜுனை தன் மூத்த மகள் ரியாவுக்கு திருமணம் செய்து வைத்தால், தான் அவருடன் தடையின்றி உறவு கொள்ளலாம் என்று நினைத்தார். ரியாவும் அர்ஜுனும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். நிச்சயதார்த்தம் நடந்தது.
இதற்கிடையே, அர்ஜுன் ரியாவின் தங்கை மியாவை பள்ளிக்கு வாகனத்தில் கொண்டு செல்வது, திரும்ப அழைத்து வருவது வழக்கமானது. "தன் அக்காவின் வருங்கால கணவர்" என்ற அடிப்படையில் மியா அவரை நம்பினாள்.
ஆனால், அந்த நம்பிக்கையை அர்ஜுன் துரோகம் செய்தார். மியாவுக்கு வயது 14 தான் என்றாலும் தோற்றம் 22 வயது பெண்ணை போல இருந்த அழகில் அர்ஜுன் மயங்கினான். கடந்த இரண்டு வாரங்களாக அவர் மியாவை தகாத முறையில் அணுகி, பலாத்காரம் செய்து வந்தார்.
ஒரு நாள் மியா பள்ளியில் இருந்து கண்ணீரும் கம்பலையுமாக வீட்டுக்கு வந்தாள். தாய் சுசிதா காரணம் கேட்டபோது, மியா உடைந்து அழுதபடி கூறினாள்:
"அம்மா... அர்ஜுன் மாமா என்னை... என்னை பலாத்காரம் செய்தார். கடந்த இரண்டு வாரங்களாக இது தொடர்கிறது. இப்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொன்னதும் அவர் என்னை கடுமையாக அடித்தார்..."
சுசிதாவின் உலகமே தலைகீழானது. ஆனால், அவர் எதிர்பாராத அதிர்ச்சி இன்னும் காத்திருந்தது. சுசிதா தன் மகளுக்கு நியாயம் கேட்கவில்லை. மாறாக, "இதை யாரிடமும் சொல்லாதே... கர்ப்பத்தை கலைத்துவிடலாம்" என்று கட்டாயப்படுத்தினார். இந்த விஷயம் வெளியே வந்தால் நம்முடைய மானமும் கப்பல் ஏறிவிடும் என பயந்தார் சுசிதா. மகளை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
ஆனால், அங்கு மருத்துவர் கர்ப்பத்தை உறுதி செய்ததும், உடனடியாக போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை நடத்தியபோது மியா அனைத்தையும் தெரிவித்தாள். காரணம் அர்ஜுன் ராய் தான் என்று கூறினாள்.
போலீஸார் உடனடியாக அர்ஜுன் ராயை கைது செய்தனர். விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின:
அர்ஜுன் சுசிதாவுடன் தகாத உறவில் இருந்தார்.
ரியாவை திருமணம் செய்ய சம்மதித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
அதே நேரத்தில் ரியாவின் தங்கை மியாவை (14 வயது) பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கினார்.
கொல்கத்தா முழுவதும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. ஒரே வீட்டில் தாயுடன் கள்ள உறவு, மூத்த மகளை மணக்க நிச்சயம், இளைய மகளை கர்ப்பமாக்கிய கொடூரம் – இது மிருகத்தனத்தை விட மோசமானது.
அர்ஜுன் ராய் மீது POCSO சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. விசாரணை தொடர்கிறது. சுசிதா மீதும் தாய் என்ற முறையில் கடமையைத் தவறியதற்காக வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கொல்கத்தாவின் மனங்களை கதிகலங்க வைத்துள்ளது. ஒரு தாயின் கொடூர திட்டமும், ஒரு ஆணின் மிருகத்தனமும் சேர்ந்து ஒரு 14 வயது சிறுமியின் வாழ்க்கையை சிதைத்துவிட்டன.
இது போன்ற கொடூரங்களுக்கு என்ன தண்டனை போதுமானது? உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.
