இந்த விடுமுறை அறிவிக்கப்பட்ட போதிலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்சாரம் மற்றும் நீர் வழங்கல்,போக்குவரத்து சேவைகள் துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து, சுகாதார சேவைகள் , பாதுகாப்பு மற்றும் காவல்துறை நடவடிக்கைகள் ஆகிய அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று இயங்கும் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அறிவிக்கப்பட்ட இந்த பொது விடுமுறை நாட்களில், அந்தந்த துறைகளின் பணிகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கும், அவசியமான சேவைகளை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் அமைச்சின் செயலாளர்களுக்கும் திணைக்களத் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையானது அரச துறைகளில் எரிசக்தி நுகர்வைக் குறைப்பதற்கான ஒரு தற்காலிக ஏற்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.
