மத்திய பிரதேசத்தின் பரபரப்பான நகரமான இந்தோர்வில், ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் அர்ஜுன் என்ற இளைஞன், கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த பிரியா என்ற மாணவியை காதலித்தான்.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களின் காதல் பூத்தது. ஆனால் பிரியா திருமணத்துக்கு முன் உடலுறவுக்கு ஒருபோதும் சம்மதிக்கவில்லை. "நம்முடைய காதல் தூய்மையானதாக இருக்கட்டும்" என்று அவள் உறுதியாக இருந்தாள்.
அர்ஜுனுக்கு பெண் பார்க்கும் பேச்சு தொடங்கியது. அப்போது டாக்டர் நீலிமா என்ற அழகிய, நல்ல வேலை பார்க்கும் மருத்துவர் பெண் கிடைத்தாள். "எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்" என்ற எண்ணத்தில் அர்ஜுன் அவளை திருமணம் செய்ய முடிவு செய்தான். பிரியாவை மறந்து, காதலை முடித்துவைக்கத் திட்டமிட்டான்.
ஒரு நாள் பிரியாவுடன் பெரிய சண்டை வந்தது. "நீ என் மீது நம்பிக்கை இல்லாமல் தானே பழகினாய்? மூன்று ஆண்டுகளில் ஒரு முறை கூட உடலுறவுக்கு சம்மதிக்கவில்லையே!" என்று அர்ஜுன் குற்றம் சாட்டினான். கண்ணீருடன் பிரியா கெஞ்சினாள் – "நான் உன்னை நம்புகிறேன். உன்னோடு உடலுறவு கொள்ள சம்மதிக்க வேண்டும் அவ்வளவு தானே.. நான் சம்மதிக்கிறேன்... ஆனால் என்னைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்!"
இங்கு தான் அர்ஜுன் ஒரு பெரிய தவறு செய்தான். நீலிமாவுடன் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், அவன் பிரியாவை ஒரு பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.
இரவு முழுவதும் அவர்கள் ஐந்து முறைக்கு மேல் உடலுறவில் ஈடுபட்டனர். பிரியா, "ஆணுறை வேண்டாம்... உன்னுடைய குழந்தையை சுமக்க விரும்புகிறேன்" என்று கூறினாள். ஆனால், அர்ஜுன் வேண்டாம் என மறுத்து ஒவ்வொரு முறை உறவு கொள்ளும் போதும் ஆணுறை பயன்படுத்தினான்.
விடியற்காலையில், பிரியா உறங்கிக் கொண்டிருக்க, அர்ஜுன் அமைதியாக அறையை காலி செய்து, ஹோட்டல் பில் கட்டிவிட்டு தப்பினான். போன் சுவிட்ச் ஆஃப்! பிரியா விழித்தபோது, அவள் தனியாக இருந்தாள்.
தரையில் கிடந்த ஆணுறைகளைப் பார்த்தாள். ஒன்றில் மட்டும் அதிக அளவு விந்து இருந்தது. கண்ணீருடன் அவள் ஒரு முடிவு செய்தாள் – அந்த ஆணுறையைத் திருப்பி, அதிலிருந்த விந்தணுக்களை தன் உடலில் செலுத்த முயன்றாள்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு... அவளுக்கு மாதவிடாய் வரவில்லை. அடுத்த சில நாட்களில், கர்ப்ப பரிசோதனை – பாசிட்டிவ்! அர்ஜுன் அப்போது நீலிமாவை திருமணம் செய்து மூன்று வாரங்கள் ஆகியிருந்தது.
பிரியா பெற்றோரிடம் சொன்னாள். அவர்கள் கர்ப்பத்தை கலைக்கச் சொன்னார்கள். ஆனால் பிரியா மறுத்துவிட்டாள். ஆறு மாத கர்ப்பத்துடன் பிரியா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாள். "இவர் என்னை கர்ப்பமாக்கிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்" என்று, சம்பந்தப்பட்ட ஹோட்டலின் CCTV காட்சிகள், காதலிக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என ஆதரங்களுடன். போலீசார் அர்ஜுனை அழைத்து விசாரித்தனர்.
நான் காதலித்தது உண்மை, உறவு கொண்டதும் உண்மை, ஆனால், ஆணுறை பயன்படுத்தினேன். குழந்தை என்னுடையதாக இருக்க வாய்ப்பில்லை" என்று அவன் மறுத்தான்.
பிரியா விடியற்காலையில் ஹோட்டலில் தான் செய்த அனைத்தையும் கதையை எழுத்து வடிவில் கொடுத்தாள். "குழந்தை பிறந்த பிறகு டிஎன்ஏ சோதனை செய்ய நான் தயார்" என்றாள்.
இதற்கிடையே, அர்ஜுனின் மனைவி நீலிமா உண்மையை அறிந்து விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தாள். "எனக்கு ஜீவனாம்சமோ, சொத்துப் பங்கோ வேண்டாம். விவாகரத்து மட்டும் போதும்" என்று அவள் மனுவில் குறிப்பிட்டாள். அவள் மனம் உடைந்து போனாலும், அர்ஜுனை தண்டிக்க விரும்பவில்லை.
குழந்தை பிறந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி டிஎன்ஏ சோதனை நடந்தது. முடிவு: குழந்தை அர்ஜுனின் தான்! அந்த ஆணுறை தந்திரம் வெற்றி பெற்றது.
நீலிமா விவாகரத்து பெற்றாள். பிரியா மகிழ்ச்சியடைந்தாள். ஆனால் அர்ஜுனை திருமணம் செய்ய அவள் மறுத்தாள். அவன் காலில் விழுந்து கெஞ்சினான் – "இனி ஒரு தவறும் செய்ய மாட்டேன். நீதான் என் மனைவி!" என்றான்.
இறுதியில், பிரியா சம்மதித்தாள். முதல் திருமணத்தின் விவாகரத்து முடிந்த பிறகு, அர்ஜுன் – பிரியா அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர்.
ஒரு காதல்... ஏமாற்றம்... தந்திரம்... கர்ப்பம்... விவாகரத்து... டிஎன்ஏ... இறுதியில் மீண்டும் காதல்! இப்படி ஒரு திருப்பங்கள் நிறைந்த கதை மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்தது.
இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கிரைம் கதை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.
