ஓமானின் வடகிழக்கில் சுமார் 25 கடல் மைல் தொலைவில் கொள்கலன் கப்பல் ஒன்று மீது அடையாளம் தெரியாத எறிபொருள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்பு (UKMTO) தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலின் போது கப்பலில் இருந்த சில கொள்கலன்கள் சேதமடைந்துள்ளதாகவும் UKMTO வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விரிவான தகவல்கள் இதுவரை வெளிவராத நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பிராந்திய கடல் பாதுகாப்பு தொடர்பாக கவலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
