ஜோதிட ரீதியில் கிரங்களின் நிலையானது 12 ராசிகளின் வாழ்ககையிலும் ஆழமான தொடர்பை கொண்டிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில், கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் தற்போது மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளது, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக விளைவுகளை ஏற்படுத்தப்போகின்றது.
கடந்த மே 11-ஆம் திகதி மதியம் 12:38 மணிக்கு மேஷ ராசிக்கு பெயர்ச்சியான செவ்வாய் ஜூன் 21 வரை மேஷ ராசியிலேயே நிலைபெற்றிருப்பார். அதனால் உச்சகட்ட சாதக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
செவ்வாய் கிரகம் மேஷ ராசியின் முதல் வீட்டில் சஞ்சரப்பதால், இவர்களின் நிதி நிலையில் அற்புதமான ஏற்றம் உண்டாகும்.
பல வழிகளிலும் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கூடிவரும். நீண்ட காலமாகவே நிலுவையில் இருந்த கடன் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும் வாய்ப்புகள் தானாக அமையும்.
சுக்கிரன், சூரியன் ஆசி மற்றுமன்றி சனியும் லாப சனியாக இருப்பதால், இவர்களின் முன்னேற்றத்தை இந்த காலகட்டத்தில் யாராலும் தடுக்கவே முடியாது.
ரிஷபம்
ரிஷப ராசியின் பன்னிரண்டாம் வீட்டில் பிரவேசித்துள்ளதால், எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி வரையில் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
தொழில் ரீதியில் சாதக பலன்கள் உண்டாகும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.
சாதாரண வியாபாராத்தில் ஈடுபடுபவர்கள் முதல் ,தொழிலதிபர்கள் வரையில் இந்த யோகத்தால் பல்வேறு வகையிலும் சாதக பலன்களை பெறுவார்கள். எந்த முறையில் பணிபுரிந்தாலும் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களின் நான்காம் வீட்டில் செவ்வாய் பிரவேசித்துள்ளதால், தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.பணியிடத்தில் சக ஊழியர்களுக்கு மத்தியில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும்.
புதிய முயற்சிகளில் குடும்பத்தினரின் முழுமையான ஆதரவும் ஆசீர்வாதமும் கிடைப்பதால், இந்த ராசியினரின் வாழ்க்கையில் இந்த காலகட்டம் அதிக வெற்றிகளை கொண்டுவரும்.
பரம்பரை சொத்துக்களால் லாபமடையும் பிராப்தம் காணப்படுகின்றது. மொத்தத்தில் தனுசு ராசியினருக்கு இந்த ராஜ யோகத்தால் வாழ்க்கையே மாறப்போகின்றது.
