நாகினி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். இவர் கடந்த 2022 இல் துபாயை சேர்ந்த தொழிலதிபர் சூரஜ் நம்பியார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சூரஜ் கேரளாவை சேர்ந்த மலையாளி என்பதால் திருமணம் பெங்காலி மற்றும் மலையாளி ஆகிய இரண்டு முறைப்படியும் நடந்தது. திருமணம் முடிந்து தற்போது நான்கு ஆண்டுகள் ஆகும் நிலையில் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
மௌனி ராய் தனது கணவர் சூரஜ் நம்பியாரை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ (Unfollow) செய்துவிட்டார் என்பதுதான் அது. அவரது கணவரும் மௌனி ராயை பின்தொடரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா என இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் அவர்கள் இருவரும் இதுவரை இது பற்றி எந்த வித விளக்கமும் கொடுக்கவில்லை.
.jpeg)