இலங்கை மக்களின் வங்கி கணக்குகளை சூறையாடும் மோசடி குறித்து பொது மக்களுக்கு, பொலிஸார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
+63 9692161720 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து வரும் போலி குறுஞ்செய்திகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த இலக்கத்திலிருந்து வரும் குறுஞ்செய்திகள் மூலம் மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
