அம்பலாந்தோட்டையில் தலை துண்டிக்கப்பட்டு ஒருவர் கொலை


அம்பலாந்தோட்டை, மாமடல தெற்கு, போகுடுயாய பகுதியில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை மற்றும் மற்றொருவருக்கு பாரிய காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


இவ்வாறு கொல்லப்பட்டவர் 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், காயமடைந்தவர் அவரது மனைவியின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 


குறித்த நபரை கொலை செய்வதற்காக மூவர் அவரது வீட்டிற்கு வந்துள்ளதுடன், அவரை கொலை செய்த பின்னர், அவரது தலை துண்டிக்கப்பட்டு மாமடல சந்தியில் உள்ள ஒரு சிலைக்கு அடியில் வைத்து விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


கொல்லப்பட்ட நபர், கடந்த ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி அம்பலாந்தோட்டை, அலேகொட மேற்கு பகுதியில் இடம்பெற்ற முக்கொலை சம்பவத்தின் சந்தேகநபர் ஆவார். 

இது தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த மார்ச் 30ஆம் திகதி பிணையில் வெளிவந்திருந்தார். 


அந்தக் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 


கொலையாளிகளால் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றையும் அவ்விடத்தில் விட்டுச் சென்ற நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர். 


சம்பவம் தொடர்பாக அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post