சென்னை தண்டையார்பேட்டையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 66 வயது முதியவர் ஜெயசூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டுக்கு அமைவாக மேற்படி முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைகளின் பாதுகாப்பு என்பது குடும்பத்தினரின் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும். குழந்தைகளுக்கு "நல்ல தொடுதல் - தவறான தொடுதல்" (Good Touch – Bad Touch) குறித்து வயதுக்கேற்ற முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏதேனும் அசௌகரியம் அல்லது தவறான நடத்தை ஏற்பட்டால், அதை உடனடியாக பெற்றோர், ஆசிரியர் அல்லது நம்பிக்கைக்குரிய பெரியவர்களிடம் தெரிவிக்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்.
குழந்தைகள் தொடர்பான பாலியல் குற்றங்களைப் பற்றி தகவல் கிடைத்தால், அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிப்பது மேலும் பல குழந்தைகளை பாதுகாக்க உதவும். குழந்தைகளின் பாதுகாப்பில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.
