இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு: பொலிஸ் கைது

கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இரண்டாம் நிலை காவலர் வினோத்குமார் என்ற போலீஸ் நாய் தன்னுடைய எச்சை வேலையை இளம்பெண்ணிடம் காட்டியுள்ளது.

இந்த போலீஸ் பொருக்கி நாய் வினோத்குமார் வெள்ளக்கிணறு ஹவுசிங் போர்டு பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணை அழைத்துச் சென்று விசாரிப்பது போல தொடக்கூடாத இடங்களில் தொட்டு அத்து மீறியுள்ளது.

தொடர்ந்து, பாலியல் ரீதியிலும் அத்துமீறி தன்னுடைய நாய் வேலையை காட்ட தொடங்கியுள்ளான் கேடு கேட்ட வினோத்குமார் என்ற கொடூர நாய். இதனை தொடர்ந்து மிரண்டு போன அந்த இளம்பெண் கத்தி கூச்சல் போடவே அங்கிருந்து தப்பி சென்றுள்ளது இந்த தெரு நாய் வினோத். 

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த பகுதி மக்களிடம் விசாரித்தபோது, சம்பவம் நடைபெற்ற அன்று இரவு, காதலனுடன் தனிமையில் நின்று பேசிக் கொண்டிருந்த இளம் பெண்ணை வினோத்குமார் தன்னுடன் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. 

இந்தச் சம்பவம் வெளியானதும் பகுதி மக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பு எழுந்தது.இதனைத் தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, வினோத்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். 

கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் காவல்துறையின் மீதான நம்பிக்கையை (ஆமாமா, ரொம்ப நம்பிக்கை வாழுது என்று நீங்கள் சொல்வது புரிகிறது) மீண்டும் ஒரு முறை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். முழு விவரங்களும் விசாரணையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பில் இருப்பவர்கள் உயர்ந்த ஒழுக்கத்தையும் பொறுப்புணர்வையும் கடைப்பிடிக்க வேண்டும். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் எந்த நபராக இருந்தாலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாலியல் அத்துமீறல் அல்லது அதிகார துஷ்பிரயோகத்திற்கு ஆளானவர்கள் அச்சப்படாமல் காவல்துறை உயரதிகாரிகள், மகளிர் உதவி மையங்கள் அல்லது நீதித்துறை அமைப்புகளை அணுகி புகார் அளிப்பது மிகவும் முக்கியம்.