கம்பஹா - கடவத்தை பகுதியில் உள்ள நெல் வயலில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை, உந்துருளியில் வந்த மூன்று இளைஞர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகக் கடவத்தை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த 17 வயதுடைய இளைஞர், ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கடவத்தை காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் முதன்மை இளைஞரையும், அவருடன் வந்த மேலும் இரண்டு இளைஞர்களையும் கடவத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் காதல் விவகாரம் தொடர்பான தகராறினால் ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
