விடுதி கட்டடம் இடிந்து விபத்து: 5 மாணவர்கள் உயிரிழப்பு

 

தென்​மேற்கு டில்​லி​யின் சத்ய நிகேதன் பகு​தி​யில் 6 மாடி கட்​டடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்​த​தில் 5 மாணவர்கள் உயி​ரிழந்​தனர்.

தென்​மேற்கு டில்​லி​யின் சத்ய நிகேதன் பகு​தி​யில் 6 மாடி கட்​டடம் மாணவர் விடு​தி​யாக செயல்​பட்டு வந்​தது. டில்லி பல்​கலைக்​கழகத்​தின் தெற்கு வளாகத்​துக்கு அரு​கில் இக்​கட்​டிடம் அமைந்​துள்​ள​தால் ஏராள​மான மாணவர்​கள் தங்​கிப் படித்து வந்​த​தாக கூறப்​படு​கிறது. இந்த கட்​டிடம் நேற்று பிற்​பகல் 1:30 மணி​யள​வில் திடீரென இடிந்து விழுந்​தது.

இதுகுறித்து தகவல் அறிந்​ததும் சம்பவ இடத்​துக்கு 12 தீயணைப்பு வாக​னங்​கள், பொக்​லைன் இயந்​திரங்​கள் மற்​றும் பேரிடர் மீட்​புப் படை​யினர் விரைந்​தனர்.

அதி​காரப்​பூர்வ மீட்​புக் குழு​வினர் வரு​வதற்கு முன்​பாகவே, உள்​ளூர் மக்​கள் கைகளாலேயே இடி​பாடு​களை அகற்றி இடி​பாடு​களுக்​குள் சிக்​கிய​வர்​களை மீட்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர். இந்த விபத்​தில் 5 மாணவர்கள் உயி​ரிழந்​தனர். மேலும் சிலர் மீட்​கப்​பட்டு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். கட்டடத்தின் உரிமையாளர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கட்​டட இடி​பாடு​களுக்​குள் பலர் சிக்​கி​யிருக்​கலாம் என்​ப​தால் மீட்​புப் பணி தொடர்ந்து நடை​பெறுகிறது. இதனால் உயி​ரிழப்பு எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கும் என அஞ்​சப்​படு​கிறது.