கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் 3 ஆம் திகதி வரையிலான நாட்களில் நாட்டின் தினசரி மின்சாரத்துக்கான தேவை குறைந்த போதிலும், தினசரி மின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆகஸ்ட் 31 ஆம் திகதி 2,947 மெகாவோட் ஆகக் காணப்பட்ட அதிகபட்ச மின்சாரத் தேவை, செப்டம்பர் 3 ஆம் திகதியளவில் 2,920 மெகாவோட் வரை படிப்படியாகக் குறைவடைந்துள்ளது.
எனினும், இந்தக் காலப்பகுதியில் தினசரி மொத்த மின் உற்பத்தி 57 முதல் 58 கிகாவோட் மணிநேரம் (GWh) என்ற அளவில் பேணப்பட்டுள்ளது.
இதில் கடந்த செப்டம்பர் முதலாம் திகதி அதிகபட்ச தினசரி உற்பத்தியாக 58.37 கிகாவோட் மணிநேரம் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
