நீங்கள் ஒரு தேங்காயை உடைக்கும் போது, அதற்குள் குளிர்ந்த நீர் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? அந்த நீர் எப்படி அதற்குள்ளே வந்தது என்று யோசித்ததுண்டா?
மரத்தின் உச்சியில் வளர்கின்ற தேங்காயின் ஓட்டுக்குள், இப்படி இனிப்பான, குளிர்ந்த நீர் இருப்பது அசாதாரணமான விஷயம்தானே?
இளநீர்: உடலுக்கு ஊட்டமும் ஆற்றலும்!
கோடை காலத்தில் தாகத்தைத் தணிக்கும் இளநீரில் உடனடி ஆற்றலை வழங்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும் இளநீரில் அதிக அளவில் நீர் இருக்கிறது. ஆனால், தேங்காய் முதிர்ச்சி அடையும் போது, அதற்குள் உள்ள நீரின் அளவு குறைந்து, வழுக்கை அதிகமாகிறது.
தென்னை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பல வகையான பயன்களை தருவதால், இதனை “வாழ்க்கையின் மரம்” என அழைக்கின்றனர். இத்தகைய மரங்கள் பெரும்பாலும் வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றன.
தேங்காயின் உடைமை மற்றும் அமைப்பு
தேங்காய் மூன்று முக்கிய அடுக்குகளைக் கொண்டுள்ளது:
எக்ஸோகார்ப் – வெளியே பச்சை நிறத்தில் இருக்கும் மென்மையான பகுதி
மீசோகார்ப் – பச்சை அடுக்கின் கீழே உள்ள நார் நிறைந்த பகுதி
எண்டோகார்ப் – உள் பகுதி; இதுவே வழுக்கையையும் (தேங்காய்) நீரையும் பாதுகாக்கிறது
இளநீரின் வழுக்கை (white flesh) முதலில் ஜெல்லி போல இருக்கும். தேங்காய் முதிரும்போது அது கடினமாகிறது. நீர் மற்றும் வழுக்கை ஆகிய இரண்டும் எண்டோகார்ப் பகுதியில் உள்ளன.
தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?
அமெரிக்காவின் தேசிய உயிரி தொழில்நுட்ப தகவல் மையத்தின் (NCBI) ஆய்வுப்படி, தேங்காய்க்குள் இருக்கும் நீர் ஒரு வகை வடிகட்டப்பட்ட திரவம்.
தென்னை மரத்தின் வேர்கள் பூமிக்குள் 1 முதல் 5 மீட்டர் ஆழத்தில் பரவியுள்ளன. இவை நிலத்தடி நீரை உறிஞ்சி, அதன் ஊடாக உள்ள xylem நாளங்கள் வழியாக, நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை மேல் நோக்கி கொண்டு சென்று இறுதியில் தேங்காயை அடைகின்றன. இவ்வாறு, தேங்காயின் உள் பகுதியில் இயற்கையாகவே நீர் உருவாகிறது.
இந்த நீர், தேங்காய் முழுமையாக வளரும்போது வழுக்கையாக மாறுவதற்கும் மூலமாகிறது.
இளநீரில் என்ன இருக்கிறது?
இளநீரில் சுமார் 95% தண்ணீர் உள்ளது. மீதமுள்ள 5%:
தாதுக்கள் – சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம்
அமினோ அமிலங்கள் – நரம்புகள் மற்றும் தசைகளுக்கு ஊட்டம்
சர்க்கரைகள் – பிரக்டோஸ், குளுக்கோஸ்
வைட்டமின்கள் – வைட்டமின் C மற்றும் B குழு
இதனால் தான் இளநீர் தாக்கத்தில் இருந்து உடலை குளிர்விக்கும், சக்தி தரும் இயற்கை ஊட்டச்சத்து திரவம் என பரிகாசிக்கப்படுகிறது.
ஒரு தேங்காயில் எவ்வளவு நீர் இருக்கும்?
இது பல காரியங்களில் சார்ந்திருக்கும்:
தேங்காயின் வயது: 6–8 மாதங்களுக்குள் இருக்கும் தேங்காய்களில் 300ml முதல் 1 லிட்டர் வரை நீர் இருக்கும்.
முதிர்ந்த தேங்காய்: (12 மாதங்கள் மேல்) – இதில் நீர் குறைவாகவே இருக்கும், ஏனெனில் உள்ளே இருக்கும் வழுக்கை தண்ணீரை உறிஞ்சிவிடும்.
மழைப்பொழிவு – மழை அதிகமானால், அதிக நீர் தேங்காய்க்குள் வரும்.
மண் மற்றும் மரத்தின் ஆரோக்கியம் – ஊட்டச்சத்து நிறைந்த மண்ணில் வளர்ந்த மரங்களில் தரமான நீர் கிடைக்கும்.
ஆனால் வறண்ட பகுதிகளில் அல்லது சீரற்ற நிலங்களில் வளர்ந்த மரங்களில் நீரின் தரம் மற்றும் அளவு குறைவாக இருக்கும்.