யாழ் காரைநகர் வேரப்பிட்டி கிராமத்தில் அதிகாலை 4மணியிலிருந்து தென்னிந்திய சினிமா பாடல்களை அதிகளவு சத்தத்தில் ஒலிபரப்பி வருகிறார்கள்.
இதனால் மாணவர்களும்-நோய்வாய்ப்பட்ட வயோதிபர்களும் மிகுந்த சிரமத்தை எதிர் நோக்குகிறார்கள்.
குறித்த கிராமத்தில் இந்த அநாகரிக செயற்பாடு தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இரவு 10 மணிக்கு பின்னரும் களியாட்ட நிகழ்வு என அதிகமாக சத்தம் எழுப்பி பாடல்களை ஒலிபரப்புவது தொடரும் செயலாக உள்ளது.
காரைநகர் பிரதேசசபை-காரைநகர் பொலிசார் உரிய நடவடிக்கை எடுத்து இதற்கு ஒரு தீர்வு தருமாறு மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
உரிய நடவடிக்கை எடுக்கா விடின் மேலிடத்தில் முறையிட சமூக ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என குறிப்பிடுகின்றனர்.
சிலரின் அற்ப மகிழ்ச்சிக்காக தொடர்ந்து பலர் பாதிக்கபடுவது குறிப்பிடத்தக்கது.