திருகோணமலை,கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி - பாரதிபுரத்தில் கனரக வாகனம் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சைக்கிளில் சென்ற 72 வயதுடைய வயோதிபர், கனரக வாகனத்தில் மோதி படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .