சிவனொளிபாத மலைக்கு சென்ற பெண் ஒருவர் பாலத்தில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், 45 வயது உடைய அக்குரஸ்ச பகுதியை சேர்ந்த எஸ்.என்.பி. குமாரி ரத்து என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் மஸ்கெலியா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.