புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரின் பத்தாம் வகுப்பு மாணவியான மகள், கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி, கருக்கலைப்பு மாத்திரைகளைப் பயன்படுத்தியதால் வயிற்று வலி ஏற்பட்டது தெரியவந்து, பெற்றோரையும் காவல்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாணவி தனது தாயிடம் வயிற்று வலி குறித்து புகார் கூறியதை அடுத்து, மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில், மாணவி போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, சமீபத்தில் கர்ப்பமாகி, அதனை கருக்கலைப்பு மாத்திரைகள் மூலம் கலைத்திருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ந்து போன தாய், மருத்துவமனை தகவலின் அடிப்படையில் காவல்துறையை அணுகினார். காவல்துறையினர் மாணவியிடம் நடத்திய விசாரணையில், சமூக வலைதளங்கள் மூலம் ‘லியோ’ என்ற நபருடன் பழக்கமானது தெரியவந்தது.
இந்தப் பழக்கம் மெல்ல மெல்ல போதைப் பழக்கத்திற்கு இட்டுச் சென்றது. ஒரு கட்டத்தில், லியோ தனது உறவினர் வீட்டிற்கு மாணவியை அழைத்துச் சென்று, போதைப் பொருட்களை ஏற்றி, பலமுறை உடலுறவு கொண்டதாகவும், இதனால் மாணவி கர்ப்பமானதாகவும் தெரிவித்தார்.
காவல்துறையினர் மாணவியின் கைபேசியை பறிமுதல் செய்து பரிசோதித்தபோது, லியோ மற்றும் பிரசாந்துடன் தனிமையில் இருந்த நூற்றுக்கணக்கான வீடியோக்கள் மற்றும் ஆபாச உள்ளடக்கங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மாணவியை போதைப் பழக்கத்தில் இருந்து மீட்க, மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. பருவ வயதில் உள்ள குழந்தைகளின் நடவடிக்கைகள், அவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்கள், பழகும் நபர்கள், மற்றும் அவர்களின் கைபேசி பயன்பாடு ஆகியவற்றை பெற்றோர்கள் கவனமாக கண்காணிக்க வேண்டிய அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
சமூக வலைதளங்களின் தவறான பயன்பாடு மற்றும் போதைப் பொருட்களின் புழக்கம் இளைஞர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ளது