புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் 20ற்கும் மேற்பட்ட யானை கூட்டம் வீதிக்கு வந்தமையால் அவ்வீதியில் பயணித்தவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
நேற்று மாலை வீதிக்கு வந்த யானை சுமார் 15 நிமிடங்கள் அப்பகுதியில் நடமாடிவிட்டு பின்னர் காட்டுக்குள் சென்றது.
யானைக்கூட்டங்களாக 20ற்கும் மேற்பட்ட யானைகள் வீதிக்கு வந்தமையால் அச்சமடைந்த பயணிகள் தமது வாகனங்களை திருப்பி வந்த திசை நோக்கிச் சென்றனர். சிலர் தூர விலகி நின்றனர்.
யானை தானாக அவ்விடத்தில் இருந்து நகர்ந்து காட்டுக்குள் சென்ற பின்னர் பயணிகள் தமது பயணத்தை தொடர்ந்தனர்.