இரத்தினபுரி-கொழும்பு பிரதான வீதியில் மீன்னான பகுதியில் பேருந்தும் பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காயமுற்ற 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
மேலதிக விபரம் இணைக்கப்படும்.
இரத்தினபுரி – அவிசாவெல்ல வீதியில் லாரி மற்றும் CTB பஸ் மோதி விபத்து – 23 பேர் காயம், இருவர் நிலை கவலைக்கிடம்.
**எஹெலியாகொடையில் பேருந்து – லொறி மோதி விபத்து: 23 பேர் காயம், இருவர் கவலைக்கிடம்**
எஹெலியாகொடை, மின்னான ஜங்சன் அருகே, இரத்தினபுரி – அவிசாவெல்ல வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் வளைவு பகுதியில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் 9 பெண்களும் 14 ஆண்களும் உள்ளதுடன், இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். பேருந்து மற்றும் லொறி சாரதிகளும் காயமடைந்தவர்களில் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.