Type Here to Get Search Results !

மாணவன் உயிரிழப்பு-பாடசாலையில் நேர்ந்த அனர்த்தம்-சற்று முன் வெளியான தகவல்..!

பலாங்கொட, ரஜவக்க மகா வித்தியாலயத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் மீது மரத்தின் கிளை ஒன்று விழுந்ததில் உயிரிழந்த மாணவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் மேலும் 17 பேர் காயமடைந்தனர் என்று பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பலாங்கொட, ரஜவக்க மகா வித்தியாலயத்தில் 13 ஆம் வகுப்பு படிக்கும் கிவிர ஹிருஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மற்றொரு மாணவரின் நிலை மோசமாக உள்ளதால், மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாடசாலைக்கு சென்ற 57 வயது தாயும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரத்தின் கிளை விழுந்த கட்டிடம் 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளில் வகுப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகும்.

காயமடைந்தவர்களில் 6 மாணவிகளும் 11 மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பாடசாலை கட்டடமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

மேலும் பலாங்கொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad