நடிகர்-நடிகைளின் மறைமுக போதைப்பாட்டி-ஆடையின்றி விழுந்து கிடந்த அவலம்-பத்திரிகையாளர் சபிதா வெளியிட்ட பகீர் தகவல்கள்..!

 மெட்ரோ மெயில் யூட்யூப் சேனலில் பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் அளித்த பேட்டியில், தமிழ் சினிமாவில் மது மற்றும் போதைப் பொருட்களின் பயன்பாடு குறித்து விரிவாகப் பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

1960கள் மற்றும் 1970களில் இருந்து தமிழ் திரையுலகில் மது மற்றும் புகைப்பழக்கம் பரவலாக இருந்ததாகவும், ஆனால் கொக்கைன் போன்ற கடுமையான போதைப் பொருட்களின் பயன்பாடு அப்போது மிகவும் அரிதாகவே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். 

சபிதா ஜோசப், பழம்பெரும் நடிகர் பி.யு.சின்னப்பாவை உதாரணமாகக் குறிப்பிட்டார். அவர் படப்பிடிப்பு தளத்திற்கு கள்ளு அல்லது மது அருந்திவிட்டு வருவது வழக்கமாக இருந்ததாகவும், அவரது பீடி நாற்றம் மற்றும் மது வாசனையால் சக நடிகை பானுமதி பெரிதும் புலம்பியதாகவும் கூறினார். 

ஒரு சம்பவத்தில், பி.யு.சின்னப்பாவின் மது நாற்றத்தால் தாங்க முடியாமல், பானுமதி ‘ரத்தினகுமார்’ படப்பிடிப்பு தளத்தை விட்டு பின்பக்க வழியாக வீட்டிற்கு சென்றுவிட்டார். 

இதனை அடுத்து, சின்னப்பா மன்னிப்பு கேட்டு, அந்த படப்பிடிப்பு முடியும் வரை மது அருந்துவதை நிறுத்தியதாக சபிதா விவரித்தார். மற்றொரு உதாரணமாக, நகைச்சுவை நடிகர் நாகேஷை குறிப்பிட்ட சபிதா, எம்ஜிஆர் முன்னிலையில் நாகேஷ் மது அருந்துவதை முற்றிலும் தவிர்த்ததாகக் கூறினார். 

எம்ஜிஆர், படப்பிடிப்பின் போது நடிகர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், ஆனால் மற்ற நேரங்களில் மது அருந்துவதை அவர் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். 

எம்ஜிஆர், “ஷூட்டிங் முடிந்த பிறகு அரை மணி நேரம் உங்களுக்கு தருகிறேன், அதற்குள் எல்லாம் முடித்துவிட்டு வேலைக்கு வாருங்கள்” என்று கூறியதாகவும் சபிதா குறிப்பிட்டார். விஜயகாந்த் பற்றி பேசுகையில், அவர் படப்பிடிப்பு முடிந்த பின்னர் இரவு நேரங்களில் மட்டுமே மது அருந்துவார் என்றும், அவர் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்தவர் இல்லை என்றும் சபிதா விளக்கினார். 

ஸ்ரீகாந்த், ஜெயசங்கர், எம்ஆர்.ராதா ஆகியோரும் கட்டுப்பாட்டுடன் மது அருந்தியதாகவும், அவர்கள் பெரும்பாலும் பீர், பிராந்தி, ஒயின் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்தியதாகவும் கூறினார். 

அந்த காலகட்டத்தில், நடிகர்கள் தங்கள் உடல் நலத்தை கருத்தில் கொண்டு கடுமையான போதைப் பொருட்களை தவிர்த்ததாகவும் அவர் தெரிவித்தார். நடிகை சாவித்திரியின் கதையைப் பற்றி பேசிய சபிதா, அவரது கணவர் ஜெமினி கணேசனின் மூன்றாவது திருமணத்தால் மனமுடைந்து, மது பழக்கத்திற்கு அடிமையானதாகவும், இதனால் அவரது சொத்துகள் பறிபோனதாகவும் குறிப்பிட்டார். 

சாவித்திரி, ஒரு காலத்தில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தவர், ஆனால் ‘பிராப்தம்’ மற்றும் ‘சுமதி என் சுந்தரி’ படங்களின் தோல்விகளால் கடனில் மூழ்கி, சொத்துகளை இழந்தார். அவரது உறவினர்களும் அவரது சொத்துகளை அபகரித்ததாக சபிதா கூறினார். இதேபோல், நடிகர் சந்திரபாபுவும் மது பழக்கத்தால் வீழ்ந்தவர் என்று அவர் குறிப்பிட்டார். 

தற்போதைய காலகட்டத்தில், கொக்கைன் போன்ற கடுமையான போதைப் பொருட்களின் பயன்பாடு தமிழ் சினிமாவில் அதிகரித்திருப்பதாகவும், இது தொடர்பாக 10-15 பேர் மீது விசாரணை நடைபெறுவதாகவும் சபிதா தெரிவித்தார். 

இதையும் தாண்டி, போதை பார்ட்டிகள் நடிகர், நடிகைகள் ஆடையின்றி ஆட்டம் போட்டு மயங்கி விழுந்து அதன் பிறகு பாதுகாப்பு பவுன்சர்கள் அவர்களை வீட்டில் பாதுகாப்பாக சேர்க்கும் பணியை செய்வார்கள். 

விஜய் உள்ளிட்ட சில நடிகர்கள் மது அருந்தினாலும், அது கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும், ஆனால் கொக்கைன் பயன்பாடு குறித்து தற்போது பேசப்படுவது பெரிய சர்ச்சையாக உள்ளதாகவும் கூறினார். இந்த விசாரணைகளில் மேலும் சில பிரபலங்கள் சிக்கலாம் என்றும், ஆனால் இது தொடர்பான முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

சினிமா துறையில் மது மற்றும் போதைப் பொருட்களின் பயன்பாடு, குறிப்பாக பார்ட்டிகளில், மறைமுகமாக நடைபெறுவதாகவும், இது பொதுவாக வெளியுலகிற்கு தெரியாமல் முடிந்துவிடும் என்றும் சபிதா கூறினார். 

தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர்கள் இதுபோன்ற சர்ச்சைகளில் அவ்வப்போது இணைக்கப்படுவதாகவும், ஆனால் இவை பெரும்பாலும் உறுதிப்படுத்தப்படாதவை என்றும் அவர் தெரிவித்தார்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post