Type Here to Get Search Results !

தேனிலவுக்கு சென்ற தம்பதியினர்-கணவர் அழுகிய நிலையில் சடலமாக-மனைவி புரியாத மர்மம்..!

 இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு புதுமணத்தம்பதி தேனிலவுக்குச் சென்ற நிலையில், மர்மமான முறையில் மாயமாகினர்.

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும் அவரது மனைவியான சோனம் ரகுவன்ஷியும் சென்ற மாதம் மேகாலயாவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்தார்கள்.


மே மாதம் 23ஆம் திகதி தம்பதியர் திடீரென மாயமானார்கள். பொலிசாரின் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, திங்கட்கிழமை ராஜாவின் உயிரற்ற உடல் Weisawdong நீர்வீழ்ச்சியின் அருகே அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.


ராஜா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படும் நிலையில், ராஜாவின் மனைவியான சோனம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லாததால் தம்பதியரின் குடும்பம் கவலையிலும் குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளது.


இதற்கிடையில், சோனம் விரதம் இருந்துவந்திருக்கிறார். தம்பதியர் காணாமல் போன அன்று சோனம் தன் மாமியாருக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார்.


அதில், தாங்கள் நீர்வீழ்ச்சி ஒன்றை நோக்கி ட்ரெக்கிங் செய்துகொண்டிருப்பதாகவும், ஆனாலும், தான் தனது விரதத்தை விடப்போவதில்லை என்றும் அவர் கூறியதாக கூறப்படுகிறது.


அந்த செய்தி இடையில் துண்டிக்கப்பட்டதாகவும், அதற்குப் பிறகு சோனமிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad