வியட்நாமில் படகு விபத்து-34 பேர் உயிரிழப்பு

சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்து - பலி எண்ணிக்கை உயர்வு

தென் சீன கடற்பகுதியில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. குறிப்பாக, ஹா லாங் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை காண தினமும் ஆயிரக்கண சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் ஹனோயில் இருந்து 53 சுற்றுலா பயணிகள் நேற்று மதியம் படகு மூலம் ஹா லாங் வளைகுடா பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.

தென் சீன கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சூறைக்காற்றுடன், கனமழை பெய்தது. இதனால், படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் பயணித்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடலில் தத்தளித்த 12 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், இந்த சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 23 பேர் கடலில் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இவ்விபத்தில் 8 குழந்தைகள் உட்பட 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post