ரஷ்யாவின் தூர கிழக்கில் சுமார் 50 பேருடன் சென்ற An-24 பயணிகள் விமானத்துடனான தொடர்பை இன்று (24) விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் இழந்துள்ள நிலையில், தேடுதல் பணிகள் நடைபெற்று வந்தது..
UPDATE >>> ரஷ்ய பயணிகள் விமானம் அமூர் பகுதியின் கிழக்கு பிரதேசத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அது டைண்டா நகருக்கு அருகில் விபத்துக்குள்ளாகி கண்டுபிடிக்கப்பட்டதாக அவசர சேவைகள் இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தன. ஆரம்ப தகவல்களின்படி, விமானத்தில் இருந்தவர்கள் யாரும் உயிர் தப்பவில்லை
