மட்டுநகரில் திருடர்கள் மாலையை பறிக்கும் போது அவர்களுடன் போராடி காயமடைந்த பாட்டி சிகிச்சை பலனின்றி சற்று முன் இயற்கை எய்தினார்
24.07.2025 ம் திகதி காலை 06:30 மணியளவில் மட்டக்களப்பு நல்லையா வீதி, வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் வசிக்கும் 78 வயது வயதான பாட்டி ஒருவர் வீதியை சுத்தம் செய்யும்போது, மோட்டார் வண்டியில் வந்த கயவர்கள் அவரின் கழுத்தில் இருந்த தங்க மாலையை அறுத்துக்கொண்டு செல்லும்போது குறித்த பாட்டி வீதியில் விழுந்து சுயனினைவு இன்றி மட்டக்களப்பு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.
குறித்த பாதகச் செயலை செய்த கயவர்களை அடையாளம் காணப்படவில்லை
பாட்டியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்
