வெளிநாட்டில் கணவன்-பிள்ளைகளை தவிக்க விட்டு-25 வயது முகநூல் காதலனுடன் ஓடிய 40 வயது தாய் கணவனுக்கு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், 40 வயது பெண் ஒருவர், தனது இரண்டு மகன்களை விட்டுவிட்டு, 25 வயது இளைஞருடன் கள்ளக்காதல் மூலம் இரண்டாவது திருமணம் செய்து மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கச் சென்றிருந்த நிலையில், தனிமையில் இருந்த அவர், பேஸ்புக் மூலம் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்படுத்தியுள்ளார்.
இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.இந்த பெண்ணுக்கு 22 மற்றும் 21 வயதுடைய இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பொறியியல் பட்டதாரியாகவும், இளைய மகன் கல்லூரி மாணவராகவும் உள்ளனர்.
கணவர் சிங்கப்பூரில் உழைத்து குடும்பத்திற்காக பணம் அனுப்பி வந்த நிலையில், இந்தப் பெண் ஒரத்தநாட்டில் வாடகை வீட்டில் மகன்களுடன் வசித்து வந்தார்.
மகன்கள் பகலில் வேலை மற்றும் படிப்பிற்காக வெளியே சென்றதால், தனிமையில் இருந்த அவர், பேஸ்புக்கில் நேரத்தை செலவிட்டு, குறிப்பாக கடலூரைச் சேர்ந்த இளைஞருடன் நெருக்கமான உறவை வளர்த்தார்.
இருவரும் மணிக்கணக்கில் பேஸ்புக்கில் உரையாடி, புகைப்படங்கள் பகிர்ந்து கொண்டனர். இறுதியில், இளைஞர் நேரில் சந்திக்க விரும்பியதால், ஒரத்தநாட்டிற்கு வந்து, தனது சகோதரியின் வீட்டில் தங்கி, வாடகை ஆட்டோ ஓட்டி வந்தார்.
இவர்களது சந்திப்புகள் ரகசியமாக நடந்த நிலையில், இந்த உறவு முறையற்ற தன்மையை அடைந்து, பெண் நான்கு மாத கர்ப்பிணியானார். கள்ளக்காதலை மறைக்க முடியாது என உணர்ந்த அவர், இளைஞருடன் குடும்பம் நடத்த முடிவு செய்தார்.
இதையடுத்து, கடந்த 12ஆம் தேதி அதிகாலை, கணவர் அனுப்பிய பணத்தில் வாங்கிய நகைகள் மற்றும் பணத்துடன், தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
காலையில் தாயைக் காணாத மகன்கள் அதிர்ச்சியடைந்து, வெளிநாட்டில் உள்ள தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். மூத்த மகன் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையில்,
பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணிலிருந்து கணவருக்கு ஒரு செய்தி வந்தது.
அதில், கடலூரில் உள்ள கோவிலில் 25 வயது இளைஞரை திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், அவருடன் குடும்பம் நடத்தப் போவதாகவும் ஆடியோ பதிவு மற்றும் திருமண புகைப்படங்கள் அனுப்பப்பட்டிருந்தன.
இந்த ஆடியோவில், பெண் தனது கணவர் தன்னை திட்டியதாகவும், தனது கள்ளக்காதல் உண்மையான காதலாக மலர்ந்ததாகவும், அதனால் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளார். இதை கேட்டு, கணவர் மற்றும் மகன்கள் பேரதிர்ச்சியில் உறைந்தனர்.
தற்போது, காவல்துறையினர் இந்த ஜோடியைத் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர். 20 பவுன் நகைகளுடன் மாயமான பெண்ணை கண்டுபிடிக்க, கடலூருக்கு சென்று விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த சம்பவம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் வெளிநாட்டில் உழைத்து குடும்பத்தை காப்பாற்ற முயன்ற நிலையில், இந்த நிகழ்வு அவரையும் மகன்களையும் மனதளவில் பெரிதும் பாதித்துள்ளது.
قد تُعجبك هذه المشاركات
إرسال تعليق
إرسال تعليق
Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.
Copied code!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.