கர்நாடக மாநிலம் ஷாஹாபூர் தாலுகாவில் உள்ள பாடசாலை ஒன்றில் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாடசாலை கழிவறையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாணவியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில்,
சுமார் 9 மாதங்களுக்கு முன்பு மாணவி அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், அதனால் கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது. அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், குறித்த சம்பவத்திற்கு காரணமான மர்மநபர் குறித்து எதுவிதமான தகவல்களும் தெரியவரவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவியும், குழந்தையும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி முழுமையாக குணமடைந்த பிறகு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமி கர்ப்பமானது குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்க தவறியதற்காக பாடசாலை முதல்வர், செவிலியர், விடுதி வார்டன் மற்றும் மாணவியின் சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு குறுகிய அறை போதும் என்ற எண்ணத்தோடு, திருமணம் செய்து கொண்ட கணவன், மனைவி இடையே நடந்த சண்டையில், கணவனே மனைவியைக் கொலை செய்து சடலத்தை வீட்டிலேயே பதுக்கி வைத்திருக்கும் சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் அரங்கேறியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி:
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் வசித்து வந்த ஜான்சன், சில மாதங்களுக்கு முன்பு சாரம்மாள் என்பவரைச் சந்தித்துள்ளார். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறி, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகு, மகிழ்ச்சியாக தங்களுடைய வாழ்க்கையை தொடங்கிய இருவரும் இனிமேல் நமக்குள் எந்த ஒழிவு மறைவும் இருக்க கூடாது என்று ஒருவருக்கொருவர் சத்தியம் செய்து கொண்டனர்.
இதுவரை என்னிடம் சொல்லாமல் மறைத்த ஏதாவது விஷயம் இருந்தால் இப்போ சொல்லிடு.. இனிமே நமக்குள் எந்த ரகசியமும் இருக்க கூடாது என மனைவி சாரம்மாவிடம் எதார்த்தமாக கேட்டுள்ளார் கணவன் ஜான்சன்.
ஆனால், இதனால் நடக்கப்போகும் விபரீதம் புரியாத சாரம்மாள், ஜான்சன் குலை நடுங்க வைக்கும் அளவுக்கு ஒரு விஷயத்தை வெள்ளந்தியாக உளறி கொட்டியுள்ளார்.
மாமா.. எனக்கு ஏற்கனவே கல்யாணமாகி ரெண்டு புள்ளைங்க இருக்கு.. என்னோட ஃபர்ஸ்ட் புருஷன் வேற பொண்ணு கூட ஓடிப்போயிட்டான்... இப்போ என்னோட புள்ளைங்க என் அம்மா வீட்டுல இருக்காங்க.. அவங்கள நம்ம கூடவே வச்சி வளர்க்கலாம் என கூறியுள்ளார் சாரம்மாள்.
இதனை கேட்டு இதயத்தில் இடி இறங்கியது போல உணர்ந்தார் கணவன் ஜான்சன். இந்த உண்மையை சாரம்மாள் மறைத்ததால், ஜான்சன் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார்.
கொலையும், சரணடைதலும்:
இந்த பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. உன்னோட நிழல் கூட என் மேல படக்கூடாது என்று சாரம்மாவை வெறுக்க தொடங்கிய ஜான்சன், ஒரு நாள் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் சாரம்மாளைக் கொலை செய்துள்ளார். பின்னர், சடலத்தை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி பாலித்தீன் பையில் சுற்றி வீட்டிற்குள்ளேயே பதுக்கி வைத்துள்ளார்.
அடுத்த என்ன செய்வது என தெரியாமல் பிணத்துடன் இரண்டு நாள் குடியிருந்துள்ளார். ஆனால், பிணத்தில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது
என்ன செய்தாலும்.. எங்கு தப்பித்தாலும் கட்டாயம் நம்மை போலீஸ் பிடித்து விடும் என பயந்து போன ஜான்சன் ஆவடி காவல் நிலையத்தில் சரணடைந்து, தனது மனைவியைக் கொலை செய்துவிட்டதாகவும், சடலம் வீட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜான்சன் கூறிய முகவரிக்கு விரைந்த காவல்துறையினர், அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது, காவல்துறையினர் ஜான்சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொட்டலமாகக் கட்டி கிடந்த அந்த மணமகளின் கழுத்தில், திருமணத்தின் போது மஞ்சள் கயிற்றைக் கட்டிய அதே கைதான், இன்று அவரது உயிரைப் பறித்து இருக்கிறது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.சமகாலத்தில், இளைஞர்கள் மத்தியில் வெறும் பொழுதுபோக்கு மற்றும் பாலியல் தேவைகளுக்காக உறவுகளைத் தேடும் போக்கு அதிகரித்து வருகிறது.
ஆனால், இந்தத் தேடல் இறுதியில் எதிர்பார்க்காத விளைவுகளையும், வாழ்க்கையையே திசை திருப்பும் சிக்கல்களையும் உருவாக்குகிறது. சமீபத்தில் ஆவடியில் நடந்த சம்பவம் இதற்கு ஒரு சோகமான எடுத்துக்காட்டு.
ஜான்சன்-சாரம்மாள் விவகாரம்: ஒரு நிஜ வாழ்க்கை உதாரணம்
சாரம்மாள் என்ற பெண்ணை வெறும் அந்தரங்கத் தேவைகளுக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் பழகிய ஜான்சன், இறுதியில் அந்தப் பெண்ணையே திருமணம் செய்ய நேர்ந்தது.
இதற்கு முக்கிய காரணம், அந்த உறவின்போது உருவான ஆடியோ ஆதாரங்கள், தனிப்பட்ட புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள். அந்தப் பெண் அவற்றை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார்.
தனது சமூக மதிப்பும், குடும்ப கௌரவமும் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில், ஜான்சன் விருப்பம் இல்லாமல் அவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்தத் திருமணத்தின் முடிவோ சோகமானது. அந்த உறவு வெறுமனே பாலியல் தேவைக்காகத் தொடங்கப்பட்டதால், அதில் உண்மையான அன்போ, புரிதலோ இல்லை. சாரம்மாளின் கடந்த காலமும் ஜான்சனுக்குத் தெரியவந்தது.
விளைவு, இருவருக்கும் இடையே சண்டை அதிகரித்து, அது ஒரு கொலையில் முடிந்தது. இப்போது, ஜான்சன் சிறையில் இருக்கிறார்.
இளைஞர்களே, உங்கள் தேடலை மறுபரிசீலனை செய்யுங்கள்!
இந்தச் சம்பவம் இளைஞர்களுக்குப் பல முக்கியமான பாடங்களைக் கற்பிக்கிறது:
உறவுகளைக் கவனமாகத் தொடங்குங்கள்: ஒரு பெண்ணுடன் பழகும்போது, அது நட்புக்கானதா, காதலுக்கானதா அல்லது வெறும் பாலியல் தேவைக்கானதா என்பதைத் தெளிவாக இருங்கள்.
ஒருவரை நாம் திருமணம் செய்யப்போவதில்லை என்றால், அவரிடம் பாலியல் சார்ந்த உறவுகளைத் தொடங்குவதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம்.
ஆவணங்கள் சிக்கலை ஏற்படுத்தும்: தனிப்பட்ட தருணங்களை புகைப்படங்கள், ஆடியோக்கள், வீடியோக்களாகப் பதிவு செய்வது உங்கள் எதிர்காலத்திற்கு ஆபத்தாக முடியும்.
இந்த ஆதாரங்கள் உறவு முறியும்போது பழிவாங்கும் ஆயுதமாகவோ, கட்டாயத்தின் காரணமாக உங்களை ஒரு திருமணத்தில் தள்ளவோ பயன்படலாம்.
பின்விளைவுகளை உணருங்கள்: ஒருவரின் தனிப்பட்ட தேவைகளுக்காக மட்டுமே பழகி, இறுதியில் எதிர்பாராத விதமாக அவரைத் திருமணம் செய்வது, எதிர்கால குடும்ப வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும்.
ஒரு உறவின் பின்னணி, பூர்வீகம், மற்றும் சமூக நிலை என அனைத்தையும் ஆராய்ந்துதான் திருமண முடிவை எடுக்க வேண்டும்.
அன்பு, மரியாதை, மற்றும் பரஸ்பர புரிதல் இல்லாத உறவுகள், நீண்ட நாள் நிலைப்பதில்லை. அது ஜான்சன்-சாரம்மாள் விவகாரத்தைப் போல, சமூகப் பிரச்சனைகளுக்கும், சட்டம் ஒழுங்கு சிக்கல்களுக்கும், ஏன் உயிரிழப்புகளுக்கும் கூட வழி வகுக்கும்.
பொழுதுபோக்குக்காகத் தொடங்கும் உறவுகள், வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


