தற்பொழுது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டடுள்ள சுகததாஸ விளையாட்டரங்கு, கிளிநொச்சி மற்றும் மன்னார் உட்பட நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விளையாட்டு அரங்குகளின் புதுப்பித்தல் மற்றும் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
விளையாட்டு தொடர்பான உள்கட்டமைப்பு மேம்பாட்டில் விசேட கட்டுமானங்களுக்கு நிபுணத்துவ அறிவுள்ளவர்களை பணியமர்த்துதல், இந்த நோக்கத்திற்காக அரசாங்க தரப்பில் ஒரு ஆலோசனை நிறுவனத்தை நிறுவுதல் மற்றும் சர்வதேச அளவிலான ஆலோசனை சேவைகளைப் பெறுவதன் முக்கியத்துவம் குறித்தும் ஆராயப்பட்டது.
பாடசாலை விளையாட்டு அபிவிருத்தியில் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதற்காகத் தேவையான நிதியை ஒதுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேற்படி அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு, விளையாட்டு மேம்பாட்டிற்கான புதிய விரிவான திட்டத்தை விரைவில் தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அண்மையில் நடைபெற்ற 2025 தேசிய இளைஞர் மாநாட்டில் பங்கேற்ற இளைஞர்களின் பங்கேற்புடன் இளைஞர் விவகார அமைச்சினால் செயல்படுத்தப்படவுள்ள எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
