பேரூந்தில் பயணித்த 20 வயது யுவதியின் அந்த உறுப்பை தொடர்ச்சியாக தடவி இம்சை செய்த நபர்-யுவதி எடுத்த அதிரடி முடிவு..!

பேருந்தில் பயணித்த யுவதிக்கு நேர்ந்த துயரம் - பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை புத்தளத்தில் பேருந்தில் பயணித்த யுவதி ஒருவரை தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தேவாயலம் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த 20 வயதான யுவதியை பல்வேறு வகையில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய 45 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்தில் பயணித்த குறித்த யுவதியை பல்வேறு தடவைகளில் சந்தேக நபர் அங்க சேட்டைக்கு உட்படுத்தியுள்ளார். சந்தேக நபரின் துன்புறுத்தல் இதன் காரணமாக அச்சம் அடைந்த யுவதில் பல பேருந்துகள் மாறி மாறி சென்ற போதும் சந்தேக நபரின் துன்புறுத்தல் தொடர்ந்துள்ளமை ஆத்திரமடைந்த யுவதி அவரை புகைப்படம் எடுத்துள்ளார். குறித்த நபர் தொடர்பில் தனது சகோதரிக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், குளியாப்பிட்டி பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மோசமான செயற்பாடு விரைந்து செயற்பட்ட பொலிஸார் அந்தப் பகுதியால் வரும் பேருந்துக்காக காத்திருந்துள்ளனர். பொலிஸ் நிலையத்தை அண்மித்த பேருந்தை நிறுத்தி சந்தேக நபரை கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் நீண்ட தூர பயணங்களில் ஈடுபடும் பேருந்துகளில் இவ்வாறு மோசமான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. குருணாகலில் இருந்து நீர்கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த யுவதியே இந்த துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post