மாதம்பட்டி ஜாய் கிரிசில்டாவின் முதல் கணவர் யாரு தெரியுமா..?

 


தமிழ் திரையுலகில் பணியாற்றிய ஜாய் கிரிசில்டா, கடந்த 2018-ம் ஆண்டு இயக்குநர் ஜே ஜே ப்ரெட்ரிக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகத் தொடங்கியது, மேலும் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.

திருமணத்துக்குப் பின்னர், ஜாய் கிரிசில்டா திரைத்துறையில் இருந்து விலகி, குடும்ப வாழ்க்கையில் முழு கவனம் செலுத்தினார். ஆனால், ஐந்து ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இந்தத் தம்பதிக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதை அடுத்து, 2023-ம் ஆண்டு இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.


இவர்களது பிரிவு, திரையுலக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.ஜே ஜே ப்ரெட்ரிக், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரை பதித்த இயக்குநர். இவர் இயக்கிய பொன்மகள் வந்தாள் திரைப்படம், நடிகை ஜோதிகாவின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாக அமைந்தது.

2020-ம் ஆண்டு கொரோனா லாக்டவுன் காலத்தில் இப்படம் நேரடியாக ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமூக நீதி மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து பேசிய இந்தப் படம், ப்ரெட்ரிக்கின் இயக்கத் திறமையை வெளிப்படுத்தியது.இதனைத் தொடர்ந்து, நடிகர் பிரசாந்த் நடிப்பில் அந்தகன் என்ற திரைப்படத்தை இயக்குவதற்கு ப்ரெட்ரிக் ஒப்பந்தமானார். இப்படம், இந்தி திரைப்படமான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாக்கப்பட்டது.ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் ப்ரெட்ரிக் இந்தப் படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து, பிரசாந்தின் தந்தையும், அனுபவமிக்க இயக்குநருமான தியாகராஜன், அந்தகன் படத்தை இயக்கி வெளியிட்டார். இந்தப் படமும் ரசிகர்களிடையே கவனம் பெற்றது.



ஜாய் கிரிசில்டாவின் திரைத்துறை பங்களிப்பு, ப்ரெட்ரிக்குடனான திருமணத்துக்கு முன்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. ஆனால், திருமணத்துக்குப் பிறகு அவர் தனது தொழில்முறை வாழ்க்கையைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தார்.டிசம்பர் 2023 பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார் ஜாய் கிரிசில்டா. அதே ஆண்டு தன்னுடைய முதல் கணவரை விவாகரத்தும் செய்திருக்கிறார்.



மாதம்பட்டி ரங்கராஜ் ஜஜாய் கிரிசில்டாின் வயிற்றில் கருவை கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் என்றும் எப்படியாவது மாதம்பட்டி ரங்கராஜிடமிருந்து மிகப்பெரிய தொகையை நஷ்ட ஈடாக பெற வேண்டும் என்று ஜாய் கிரிசில்டாவும் முயற்சி செய்து வருகிறார் என்றும் பொதுவெளியில் பேசப்படுகிறது. ஆனால், இப்போது தான் கதையே ஆரம்பிக்கிறது.தன்னுடைய முதல் கணவரை ஏன் விவாகரத்து செய்தார் ஜாய் கிரிசில்டாம..? முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததற்கு காரணமே மாதம்பட்டி ரங்கராஜுடன் ஏற்பட்ட தொடர்பாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.காரணம், முதல் கணவருடன் விவாகரத்து டிசம்பர் 2023 மற்றும் மாதம்பட்டி ரங்கராஜுடன் நடந்த திருமணம் டிசம்பர் 2023. இந்த கால அளவு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. திருமணம் ஆகி கணவருடன் வாழ்ந்து வந்த பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்கினாரா மாதம்பாட்டியார்..? என்ற கேள்வியும் எழுகிறது.



இது குறித்து, ஜாய் கிரிசில்டாவின் முதல் கணவர் ஜே ஜே ப்ரெட்ரிக் கூறினால் தான் உண்மை தெரிய வரும்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post