கிளிநொச்சி பரந்தன் பகுதியில் சற்றுமுன் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கிளிநொச்சியில் இருந்து விழாவோடை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் மோதியே குறித்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது
முல்லைத்தீவில் இருந்து யாழ்நோக்கி அதிக வேகத்துடன் வந்த தனியார் பேருந்து இரண்டு பேருந்துகளை முந்தி செல்ல முற்பட்டவேளை சமிஞ்சையை செலுத்தி எதிர்பக்கத்திற்கு செல்வதற்காக காத்திருந்த முச்சக்கர வண்டி மீது மோதி குறித்த விபத்து சம்பவம் சற்றுமுன் பதிவாகியுள்ளது
முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் படுகாயத்துடன் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்
சம்பவ இடத்திற்கு வருகை தந்து கிளிநொச்சி போக்குவரத்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
