ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து; 57 பேர் படுகாயம் செக் குடியரசின் பிளென் நகரில் இரு ரயில்களும் நேருக்குநேர் மோதியதில் 55 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு குழுவினர் விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இந்த விபத்து காரணமாக செஸ்கே புடெஜோவிஸ்- பிளென் ஆகிய நகரங்களுக்கு இடையே பல மணி நேரம் ரயில் சேவை துண்டிக்கப்பட்டது.
