மணப்பெண்ணை சுவரில் மோதி கொலை : திருமணத்திற்கு ஒரு மணிநேரம் முன்பு நடந்த கோரம்-வெளியான அதிர்ச்சி காரணம்

 


குஜராத்தின் பாவ்நகரில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. திருமணத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே மணமகன் மணப்பெண்ணை இருப்புக்கம்பியால் தாக்கி, கொலைசெய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சஜன் பரையாவும், சோனி என்ற பெண்ணும் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக ‘லிவ் இன்’ உறவில் இருந்து வந்துள்ளனர். இவர்களுக்கு பெற்றோர் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் இவர்கள் இருவரும், திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து உள்ளார். நேற்று இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆக இருந்த நிலையில், திருமண நாளன்று காலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திருமணச்சேலை பிடிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அது அப்படியே வரதட்சணை, பணப்பிரச்சனை என நகர்ந்து பெரும் சண்டையாக மாறி உள்ளது.


இதில் ஆத்திரமடைந்த சஜன், சோனியை இரும்புக்கம்பியால் தாக்கி, சுவற்றில் அவரின் தலையை மோதி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். போலீசார் சோனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை நடத்தி, குற்றம் சாட்டப்பட்ட சஜனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருமண நாளுக்கு முதல் நாளில் அண்டை வீட்டாரோடு, தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இவர் மீது 2 FIR பதிவுசெய்யப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post