யாழில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி பகுதியைச் சேர்ந்த கனகசுந்தரம் நந்தினி (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் தனிமையில் வசித்து வந்துள்ளார். கடந்த செவ்வாய் கிழமைக்கு பின்னர் இவரது நடமாட்டம் இன்மையால் அயலில் உள்ளவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.
இதன்போது அவர் கட்டில் மீது சடலமாக இருப்பது அவதானிக்கப்பட்டது. பின்னர் சடலமானது மீட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
