லண்டனில் தனது உயிர் நண்பனின் 13 வயது மகளை கர்ப்பமாக்கிய இளைஞன்! நண்பனின் மனைவியுடனும் கள்ளக்காதல்!!

 


லண்டனில் தனது உயிர்த் தோழனின் மனைவியையும் ஒரே ஒரு மகளையும் தன்வசப்படுத்தி நண்பனிடமிருந்து பிரித்துச் சென்றுள்ளான் சாவகச்சேரிப் பகுதியை சொந்த இடமாகக் கொண்ட 39 வயதான நேசரட்ணம் தனஞ்சியன். சிறுவயதிலிருந்தே நட்புடன் பழகிய தனது உயிர்த் தோழனுக்கு துரோகம் செய்து அவனது மகளையும் கர்ப்பமாக்கி அவனது மனைவியையும் அவனிடமிருந்த பிரித்துள்ளான் குறித்த கொடியவன். சாவகச்சேரிப் பகுதியில் 2000ம் ஆண்டு இடம்பெற்ற இடப்பெயர்வின் போது யாழ் வடமராட்சிப் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்று அங்கு வாழ்ந்து வரும் போது பாடசாலை ஒன்றில் கற்று வந்த போது அதே பாடசாலையில் கற்றுவந்த குறித்த நண்பனுடன் 11வயதிலிருந்தே நெருங்கிய நட்பாக இருந்து வந்துள்ளான். 2007 யுத்த காலத்தில் நண்பன் லண்டன் சென்றுள்ளான். லண்டன் செல்வதற்கு முன்னரே தனது ஊரில் வாழ்ந்து வந்த யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளான். அதன் பின்னர் 2011ம் ஆண்டளவில் தனது காதலியையம் லண்டனுக்கு வரவழைத்து திருமணம் செய்து வாழ்ந்து வந்தான். இவன் லண்டனில் வாழும் போது தனஞ்சியன் இவனுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளான். அதன் பின்னர் தனஞ்சியனையும் இவனே கடும் முயற்சி செய்து 2023ம் ஆண்டு லண்டன் எடுத்ததாகத் தெரியவருகின்றது. அதற்கான செலவின் ஒரு பகுதியையும் தனஞ்சியனுக்காக கொடுத்தே லண்டனுக்கு வரவழைத்துள்ளான் நண்பன். தனஞ்சியன் இலங்கையில் திருமணம் முடித்து மனைவியும் குழந்தையும் உள்ளார்கள். இவ்வாறான நிலையில் லண்டன் வந்த தனஞ்சியன் தனது நண்பனின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளான். நண்பனின் மனைவியும் லண்டனில் கணக்கியல் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளாள்.. இவ்வாறான நிலையில் தனஞ்சியனுக்கும் நண்பனின் மகளுக்கும் இடையிலும் நெருங்கிய நட்பு ஏற்பட்டிருந்ததை நண்பன் அறியவில்லை. அடிக்கடி வீட்டுக்கு வந்து போன காரணத்தாலும் தனது மகளையும் அவனுடன் பல தடவைகள் வெவ்வேறு இடங்களுக்கு குடும்பமாக அழைத்துச் சென்ற காரணத்தாலம் மனைவி மற்றும் பிள்ளையுடன் தனஞ்சயனுக்கு தவறான தொடர்பு இருப்பதை நண்பன் அறியவில்லை. சிறிது காலத்தின் பின்னர் மனைவியின் சில நடவடிக்கையின் பின்னரே நண்பன் அறிந்துள்ளான். தனஞ்சியனுக்கும் தனது மனைவிக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டதை அவதானித்த நண்பன் மனைவியைக் கண்டித்து தனஞ்சியனின் நட்பையும் முறித்துள்ளான். அண்மையில் நண்பனின் மகள் மாதவிடாயை விட கூடுதலான உதிரப் போக்குடன் தாயாரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். குறித்த உதிரப் போக்கு கர்ப்பம் கலைத்தமைக்கான சான்று என வைத்தியர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் மகளிடம் அவர்கள் விசாரணைகளை மேற்கொண்ட போது மகள் சம்மதிக்கவி்லலை என்றும் தெரியவருகின்றது. தாயாரே கர்ப்பத்தை கலைக்க உதவியதாக வைத்தியர்கள் சந்தேகப்பட்டும் அவர்களால் அதை உறுத்திப்படுத்த முடியாத காரணத்தால் பொலிஸ் விசாரணைகள் இன்றி அவர்கள் வெளியேறியுள்ளாாகள். அதன் பின்னர் மனைவியையும் மகளையம் நண்பன் விசாரணை செய்ய முற்பட்ட போது அங்கு முரண்பாடுகள் ஏற்பட்டு மனைவி மற்றும் மகளை நண்பன் தாக்கியுள்ளான். அத்துடன் அவர்களை அறை ஒன்றினுள் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளான். தான் தாக்கப்பட்டமை தொடர்பாகவும் தனது மகளின் கர்ப்பம் தொடர்பாகவும் தாங்கள் சிறைப்பட்டிருப்பது தொடர்பாகவும் மனைவி தனஞ்சயனுக்கு உடனடியாக தெரியப்படுத்திய போது தனஞ்சயன் அதனைப் பொலிசாருக்கு அறிவித்ததாக தெரியவருகின்றது. குறித்த பகுதியில் அறையில் அடைக்கப்ப்பட்டு தாயையும் பிள்ளையையும் சித்திரவதை செய்வதாக தெரிவித்தே தனஞ்செயன் பொலிசாருக்கு அறிவித்துள்ளான். நண்பனின் வீட்டுக்குச் சென்ற பொலிசார் அங்கு விசாரணை நடத்தி காயப்பட்டிருந்த மனைவியையும் மகளையும் மீட்டதுடன் நண்பனை கைது செய்ததாகத் தெரியவருகின்றது. இந் நிலையில் தற்போது மனைவியும் மகளும் தனஞ்சயன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகத் தெரியவருகின்றது. மகளின் கர்ப்பம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை இன்னும் மேற்கொள்ளவில்லை எனவும் இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கையை நண்பன் எடுக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.



கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.