Type Here to Get Search Results !

3ம் தவணை பரீட்சை இல்லையா-சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு..!

சகல வலயக் கல்விப் பணிப்பாளர்கள்,வடக்கு மாகாணம்

தவணைப் பரீட்சை தொடர்பானது

மேற்படி விடயம் தொடர்பாக நிரல் கல்வி அமைச்சின் ED/09/12/06/05/01 ஆம் இலக்க 2025.12.08 ஆம் திகதிய சுற்று நிருபத்திற்கு அமைவாக, தவணைப் பரீட்சைகளை தரம் 6 தொடக்கம் 10 வரையான வகுப்புக்களுக்கு இம்முறை நடாத்த முடியாது தங்கள் வலயத்தில் வினாத்தாள்கள் அச்சிடப்பட்டு பெறப்பட்டிருந்தால் அவற்றை பயிற்சி வினாத்தாள்களாக பயன்படுத்த பாடசாலைக்கு வழங்க முடியும். 

மற்றும் நேர அட்டவணை வழங்கி பரீட்சையாக நடாத்தல், புள்ளிப்பகுப்பாய்வு செய்தல், தேர்ச்சி அறிக்கையில் பதிதல் போன்றைவை மேற்கொள்ளமுடியாது.

தரம் 11 இற்குரிய பயிற்சிப் பரீட்சை நடைபெற உள்ளதால் தரம் 11 இற்குரிய வினாத்தாள்களை அச்சிட்டு வலயத்தில் வைத்திருப்பதுடன், நேர அட்டவணை அனுப்பப்பட்ட பின்னர் பாடசாலைகளுக்கு விநியோகிக்க முடியும். 

இதுவரை அச்சிடப்பட்ட வினாத்தாள்களுக்கும் தரம் 11 இற்குரிய வினாத்தாள்களுக்கும் கொடுப்பனவை மாகாணக் கல்வி திணைக்களத்திடம் கோரிப் பெற்றுக் கொள்ளமுடியும்.

NOTE தரம் 11 வினாத்தாள்களை தளிர அச்சிடப்படாத வினாத்தாள்கள் இருந்தால் அவற்றை அச்சிடத் தேனையில்லை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad