சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை விபரீத முடிவு..

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடரான 'சிறகடிக்க ஆசை'யில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ராஜேஸ்வரி, குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சைதாப்பேட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, திருமணத்திற்குப் பின் முத்தியால் பேட்டையில் வசித்து வந்தார். 'பாக்கியலட்சுமி', 'பனிவிழும் மலர்வனம்' உள்ளிட்ட பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர், வெள்ளித்திரையிலும் சிறு வேடங்களில் தோன்றியுள்ளார்.


ராஜேஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.


கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக, ராஜேஸ்வரி கோபித்துக்கொண்டு சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கிருந்தபடியே டிவி தொடர்களின் படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்தார்.


இருப்பினும், கணவருடனான பிரச்சினை காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று இரவு (டிசம்பர் 11), தாய் வீட்டில் இருந்தபோது அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் ராஜேஸ்வரி.


உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும், சிகிச்சை பலனளிக்காமல்  காலை (டிசம்பர் 12) உயிரிழந்தார்.


சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், சைதாப்பேட்டை காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


தற்கொலைக்கான உண்மையான காரணம் விசாரணை முடிவில்தான் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ராஜேஸ்வரியின் மறைவுக்கு சின்னத்திரை நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம், குடும்ப பிரச்சினைகளால் ஏற்படும் மன உளைச்சலின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.


Summary in English : Tamil TV actress Rajeswari, famous for her role as a mother in Vijay TV's 'Siragadikka Aasai' and shows like 'Bhagyalakshmi', died by suicide in Chennai after overdosing on blood pressure pills amid ongoing marital disputes. She had moved to her mother's house in Saidapet following a recent argument. Despite hospital treatment, she succumbed. Police are investigating the incident, with condolences from industry peers.

 

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post