119 அவசர இலக்கத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல் மற்றும் தேவையான குறுகிய தொலைபேசி இலக்கம் குறித்து மக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை பொலிஸார் விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக, உண்மையான அவசர சந்தர்ப்பங்களில் 119 அவசர அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போவதுடன், அத்தியாவசிய அவசர முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கும் திறன் பாதிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த 119 இலக்கங்களுக்கு தவறான தகவல்களை வழங்குபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் அரச ஊழியருக்கு தெரிந்தே தவறான தகவல்களை வழங்குவது இலங்கை சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
