பாபா வாங்கா கணிப்பு படி ஆடம்பர வாழ்க்கை வாழும் ராசிக்காரர்கள்

 


பிரபல பல்கேரிய ஞானியான பாபா வங்கா, தனது அதிர்ச்சியூட்டும் துல்லியமான கணிப்புகளால் உலகம் முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். உலக நிகழ்வுகள் பற்றி பாபா வாங்காவின் கணிப்புகள் போலவே குறிப்பிட்ட ராசிகளின் எதிர்காலம் பற்றிய அவரது கணிப்புகளும் மிகவும் பிரபலமானவை. அவரது கணிப்புகளின் படி சில ராசிக்காரர்கள் எதிர்காலத்தில் ராஜாவைப் போல ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.


மேஷம் கிரகங்களின் தளபதியான செவ்வாய் கிரகம் மேஷ ராசியை ஆள்கிறார், மேலும் இந்த நெருப்பு ராசியின் கீழ் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் வரக்கூடிய நேர்மறையான மாற்றங்களை வரவேற்க எப்போதும் தயராக இருப்பார்கள். துணிச்சலும், மன உறுதியும் ஒரு மேஷ ராசிக்காரரிடம் இருக்கும் இரண்டு வலிமையான குணங்களாகும். இந்த குணங்கள் அவர்களை வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே விரும்பிய இலக்குகளை அடையவும், நன்மைகளைப் பெறவும் உதவும். நல்ல முதலீட்டுத் தேர்வுகளை மேற்கொள்வது, அடிக்கடி வேலைகளை மாற்றுவது மற்றும் ஒரு புதிய தொழிலைத் தொடங்குவது போன்றவற்றின் மூலம் அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழலாம் என்று பாபா பாபா வாங்கா கணித்துள்ளார். அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் அதிர்ஷ்டம் துணை நிறைக்கும்.


ரிஷபம் அழகு மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள், அவர்களின் நிதானமான குணம் காரணமாக அவர்கள் வாழ்க்கையில் சிறப்பான அதிர்ஷ்டத்தைப் பெறுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் சில ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், அவர்களின் ஆளும் கிரகம் எதிர்காலத்திற்காக விவேகமான முதலீடுகளைச் செய்ய அவர்களைத் தூண்டுகிறது மற்றும் அவர்களுக்கு வெற்றியைத் தருகிறது. சமூகத்தில் தங்களின் நற்பெயரை உயர்த்துவதற்கும், கடின உழைப்பிற்கான பலன்களை அறுவடை செய்வதற்கும் கிடைக்கும் வாய்ப்பை அவர்கள் ஒருபோதும் தவற விடமாட்டார்கள். அவர்களின் மன உறுதியும், அதிர்ஷ்டமும் அவர்களுக்கு ராஜ வாழ்க்கையை அளிக்கிறது.


மிதுனம் கிரகங்களின் இளவரசரான புதன் கிரகத்தால் மிதுன ராசிக்காரர்கள் ஆளப்படுகிறார்கள், மேலும் அவர்கள் எதிர்காலத்திற்காகத் திட்டமிடுவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். அவர்களின் ஆர்வம் மற்றும் திறமை காரணமாக அவர்களுக்கு இளம் வயதிலேயே பெரிய வெற்றிகளை அடைவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். தங்களுக்கு மிகவும் முக்கியமானது எது என்பதில் அவர்கள்மிகவும் தெளிவானவர்களாக இருப்பார்கள். அவர்களின் மிகப்பெரிய பலமே அவர்களுடைய பேச்சாற்றலும், விரைவான புத்திசாலித்தனமும்தான். அவர்களின் நெகிழ்வுத்தன்மையும், வெளிப்படையான அணுகுமுறையும் வாய்ப்புகளை அவர்களை நோக்கி ஈர்க்கிறது. அதனால் அவர்கள் ராஜ வாழ்க்கையை வாழ்வதை யாராலும் தடுக்க முடியாது.


சிம்மம் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் இயல்பிலேயே தலைமைத்துவம் மற்றும் தன்னம்பிக்கைக் கொண்டவர்களாக இருப்பார்கள். சிம்ம ராசிக்காரர்கள் ஒரு தொழிலாளியாக சாதிப்பதை விட வெற்றிகரமான முதலாளியாக இருப்பார்கள். அவர்கள் தங்களின் தைரியத்தாலும், திறமையாலும் மிகப்பெரிய நிறுவனங்களை உருவாக்கக் கூடியவர்கள். அதிர்ஷ்டம் அவர்களுக்கு எப்போதும் துணைஆய்க இருக்கும், மேலும் அவர்களை தேடிவரும் நல்ல வாய்ப்புகளின் விளைவாக அவர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்தை அடையலாம். அவர்கள் சிறந்த தலைவராகவோ அல்லது முதலாளியாகவோ சமூகத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்குவார்கள்.



கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.