பெண்கள் வெளிநாட்டு பயணமும் அங்கு நடக்கும் விபரீதமும்...!!
ஒரு உண்மை சம்பவத்தில் இருந்து, ஒரு பெண்ணின் குமுறல்...!!
மூன்று பிள்ளைகளின் தாய் 27 வயசு தன் தந்தையின் உழைப்பில் கட்டிய வீட்டில் திருமணம் செய்து வாழும் போது.
இரண்டு பெண் பிள்ளைகள் பிறக்கின்றது கணவனின் தொழில் சாப்பிட மட்டுமே போதுமானது.
ஒரு பிள்ளைக்கு, இருக்கும் வீட்டை கொடுத்தால்,மற்ற பிள்ளைக்கு வளவும் இல்லை வீடும் இல்லை.
ஆகவே வெளிநாடு போக தீர்மானம் செய்கின்றாள் மனைவி, கணவனும் அனுமதி வழங்குகின்றனர்.
அவள் போன வீடு சீயா மதத்தை சேர்ந்த அரபிகள் வாழும் வீடு ஆகும்.
அந்த வீட்டில் 2 பெண்கள் 4 ஆண்கள் வாழும் வீடு ஆகும்.
இப்போ அந்த பெண் பேசுகின்றாள்...!!
வீட்டுல வேலைக்காரி நான் மட்டுமே சமையல் நான்தான், 6 பேரின் ஆடைகள் கழுவனும், வீடு துப்பரவு செய்யணும்.
எனக்கு அரபியும் தெரியாது அடிக்கடி சத்தமாக பேசுவார்கள் எனக்கு பயம் வரும்.
இரவு இரண்டு மணிக்கு தூங்கி காலை 5 மணிக்கு எழும்பனும்.
ஒரு நாள் நான் இரவு தூங்கும் போது என் அருகில் ஒருவன் வந்து கட்டி அனைத்தான்.
மிக மோசமாக நடந்து கொண்டான் பிறகு அவன் தொடர்ச்சியாக என்னை பாவித்தான்.
இதை கண்ட அவனின் மகன் அதே போல் நடந்து கொண்டான்.
நான் குழந்தை உண்டாகினேன்,இதை அவனிடம் சொன்னேன் அவன் என் வைற்றில் ஓங்கி அடித்தான் பேசிக்கொண்டு இருக்கும் போதே.
எனக்கு உடனே இரத்தம் போனது கருவும் கலைந்தது.
எனக்கு காய்ச்சல் வந்தாலும், மருந்து எடுத்து தருவது இல்லை என் நிலைமை போக போக பைத்தியம் பிடித்தது போல் இருந்தது.
இப்படி 2 வருடம் கழித்து வீடு திரும்பினேன்.
என் நிலைமையில் பெரிய கொடுமை என்ன தெரியுமா..?
அந்த அரபிகள் என்னோடு உறவு வைக்கும் போது, காயம் ஏற்படும், ரத்தம் வரும் அது ஆறும் முன் என்னை மீண்டும் பாவிப்பார்கள்.
அவர்கள் சம்பளம் தந்த அன்று மட்டும்,அவர்களின் போனில் பேச வைப்பார்கள்.
வீட்டில் இருந்து வெளியே போக முடியாது.
என் பிள்ளைகள் சீர் அழிந்து வீடும் நாசமா போய் கணவன் என் காசை எல்லாம் அழித்து.
அவன் வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்தி மகிழ்ச்சியாய் வாழ்கின்றான்.
என்று ஒரு மனநோயாளி போல் பேசினாள்.
இப்போ அவனை விவாகரத்து செய்ய வந்துள்ளாள் அந்த பெண்.
இது மிகப்பெரிய படிப்பினை...
ஒரு பெண் ஆயிரம் ஆண்களுடன் தொடர்பு வைத்து இருந்தாலும் அவள் வாயால் சொல்ல வாய்ப்பு இல்லை கணவனிடம்.
ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்து இருந்தால் ஆயிரம் பெண்களுடன் தொடர்பு வச்சது போல் பேசுவான் வெளியில்.
ஒரு ஆண் ஒரு பெண்ணை சரியாக வைத்து கொள்ள வில்லை என்றால்.
யானை திண்ட விளாங்காய் வாழ்வில் கிடைக்கும்..
வறுமைக்காக மத்திய கிழக்கு நாடுகள் சென்று சொல்லான துன்பங்களை அனுபவிக்கும் பெண்களே கஞ்சியோ கூலோ சொந்த நாட்டில் இருங்கள்.
வறுமை உண்மைதான் ஆனால் உழைப்போடு உடலையும் அல்லவா காசு தந்து கேட்கிறார்கள்.
மீண்டும் சந்திப்போம் ஒரு உண்மை சம்பவத்துடன்...!
